அமெரிக்காவின் பாஸ்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வேஃபேர் (WAYFAIR) நிறுவனம், மரச்சாமான்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரஜ் ஷா உள்ளார். அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கிடங்குகளை வைத்து வீட்டு உபயோக பொருட்களை இந்நிறுவனம் விநியோகம் செய்து வருகிறது.

உலகம் முழுவதும் 11,000-க்கும் அதிகமான ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வேஃபேர் நிறுவனம் 1,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் சமீபத்தில் தான் லாபகரமாக இயங்குகிறது, ஆனால் ஊழியர்கள் நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்க வேண்டும் என அறிவுறுத்தி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த தொடர்ந்து வெறும் ஒரு மாத இடைவெளியில் 1,650 பேரை பணிநீக்கம் செய்த தலைமை செயல் அதிகாரியான நீரஜ் ஷா-வின் செயல் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பணி நீக்கம் தொடர்பான நிறுவனத்தின் முடிவு உங்கள் மீது ஏற்படும் தாக்கத்திற்கு வருந்துகிறேன் என ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் சுட்டிக்காட்டியுள்ள நீரஜ் ஷா, வலுவான பொருளாதார காலகட்டத்தில் , நமது அடிப்படை கொள்கைகளை மீறி ஊழியர்களை பணி அமர்த்தினோம்.
இந்த நிலையில் நிறுவனத்தின் நீண்ட கால முன்னேற்றத்தை மனதில் கொண்டு, 1,650 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். மனிதவளத் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு பணி நீக்கத்துடனான பலன்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பி இருந்த மின்னஞ்சலில், வேஃபேர் நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்கி வருகிறது என்றும், ஊழியர்கள் நேரம் காலம் பார்க்காமல் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் நீரஜ் ஷா கூறி இருந்தார்.
நீண்ட நேர வேலை, நிறுவனத்தின் மீது அக்கறை மற்றும் வேலையையும் வாழ்க்கையும் ஒன்றாக்குவது ஆகியவை வெட்கப்பட வேண்டியவை அல்ல என ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார். இது அவர் மீது பல்வேறு விமர்சனங்களுக்கு வழி வகுத்தது.
நீரஜ் ஷா மோசமான பணி கலாசாரத்தை கொண்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்தன. வேஃபேர் நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என சமூக ஊடகங்களிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.
கொரோனா பெருந்தொற்று தாக்கத்தை அடுத்து சிக்கன நடவடிக்கையாக 2022ஆம் ஆண்டும் வேஃபேர் நிறுவனம் 5% ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications