ஏர்டெல் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என்றும் ஏர்டெல் சிம் கார்டுகள் மற்றும் ரீசார்ஜ் செய்ய மாட்டோம் என்றும் செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் ரீசார்ஜ் நலசங்கம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் ஏராளமான வாடிக்கையாளர்கள் வைத்து லாபத்துடன் இயங்கி வரும் நிறுவனமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நிறுவனம் தமிழகத்தில் உள்ள விற்பனையாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், இதனை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்றும் ஏற்கனவே செல்போன் சர்வீஸ் மற்றும் ரீசார்ஜ் நலசங்கம் தெரிவித்திருந்தது.
மாநிலம் தழுவிய போராட்டம்
இந்த நிலையில் இன்று ஏர்டெல் நிறுவனத்தை கண்டித்து மாநிலம் தழுவிய மிகப்பெரிய கண்டன மற்றும் முற்றுகை போராட்டத்தை செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் ரீசார்ஜ் நலசங்கம் நடத்தி வருகிறது. வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், விநியோகிஸ்தர்களுக்கான சேவை மைய எண்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையை விற்பனையாளர்களுக்கு நிறுத்தியுள்ளதாகவும் விற்பனையாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏர்டெல் சிம்கார்டு
அதுமட்டுமின்றி ஏர்டெல் நிறுவனத்தின் முகவர்கள் நேரடியாக தெரு ஓரங்களில் கடை போட்டு ஏர்டெல் சிம் கார்டுகளை விற்பனை செய்வதாகவும், ஆனால் தங்களுக்கு மட்டும் தினமும் இரண்டு சிம் கார்டுகளை விற்பனை செய்தால் மட்டுமே ரீசார்ஜ் செய்வதற்கு அனுமதி அளிப்போம் என்றும் நிபந்தனை விதிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இன்று ஒரு நாள் மட்டும்
எனவே ஏர்டெல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இன்று ஒரு நாள் மட்டும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வருவதாகவும், இதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என்றும், இன்று ஒருநாள் ஏர்டெல் ரீசார்ஜ் செய்ய மாட்டோம் என்றும் செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் ரீசார்ஜ் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
குற்றச்செயல்
ஏர்டெல் நிறுவனத்தின் முகவர்கள் நேரடியாக சிம் கார்டு விற்பனை செய்யும்போது வாடிக்கையாளர்கள் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கி ஆக்டிவேட் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு சிம்கார்டு விற்பனை செய்வதில் ஏர்டெல் துணை புரிந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சர்வாதிகார போக்கு
ராணுவத்திற்கும், அரசுக்கும், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற சேவையை வழங்கி வரும் ஏர்டெல் நிறுவனத்தின் தான்தோன்றித்தனமான, சர்வாதிகாரப் போக்கை கண்டித்து இன்று ஒரு நாள் மட்டும் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக அனைத்து செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் மற்றும் ரீசார்ஜ் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications