மும்பை: ஒரு நல்ல வேலை, அளவான நல்ல சம்பளம். அதிக சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை வாழ பலருக்கும் ஆசை இருந்தாலும், அப்படிப்பட்ட வாழ்க்கை மிக மிகச் சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது.
அன்பான கணவன் / மனைவி, அழகான குழந்தைகள், சனிக்கிழமை காலையில் எண்ணெய் குளியல், மாலையில் குழந்தைகளுடன் ஷாப்பிங் கோவில்.. சோம்பலான ஞாயிற்றுக்கிழமை மதியம் மணக்க மணக்கமட்டன் குழம்பு, மாலையில் மனைவி குழந்தை உடன் சினிமா செல்வது... எல்லாம் விசு சார் படத்தில் மட்டுமே வரும் காட்சிகளாகிவிட்டது.
ஆனால் அப்படி வாழ, மகாராஷ்டிர அரசு ஊழியர்களுக்கு, மகாராஷ்டிர அரசு ஒரு வழி செய்து இருக்கிறது.
5 வேலை நாட்கள்
வரும் பிப்ரவரி 29, 2020 முதல் மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்கள், வாரத்துக்கு ஐந்து நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதுமாம். மீதமுள்ள சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இரண்டு நாட்கள் விடுமுறையாம். இது மகாராஷ்டிரா அரசில் அதிகாரிகள் தொடங்கி கடை நிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் பொருந்துமாம்.
முடிவு
இந்த வாரத்துக்கு ஐந்து வேலை நாட்கள் முடிவை, மகாராஷ்டிர மாநிலத்தின் கேபினெட் அமைச்சரவைக் கூட்டத்தில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் எடுத்து இருக்கிறார்களாம். இதனால் சுமார் 20 லட்சம் மகாராஷ்டிர அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயன் பெற இருக்கிறார்களாம்.
இவர்களும் உண்டு
யாருக்கு எல்லாம் இந்த வாரத்துக்கு ஐந்து வேலை நாட்கள் அறிவிப்பு பொருந்தும் என்று கேட்டால், அரசு அமைப்புகள், அரசு உதவி பெறும் அமைப்புகள், லோக்கல் பாடிக்கள் போன்ற மகாராஷ்டிராவின் அரசு சார்ந்த எல்லாம் அமைப்புகளுக்கும் பொருந்தும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஊழியர்கள்
பொதுவில், புதிதாக ஒரு அரசு அமைகிறது என்றால், அரசு ஊழியர்களை தங்கள் பக்கம் இழுக்க சம்பள உயர்வு போன்றவைகளை, அரசியல் கட்சிகள் கையில் எடுக்கும். நம் உத்தவ் தாக்கரே, விடுமுறையைக் கையில் எடுத்து இருக்கிறார். எப்படியோ, வாரத்தில் ஐந்து வேலை நாட்கள் முறையைக் கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள் உத்தவ் சார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications