உலகம் முழுவதும் அனைத்து நிறுவனங்களும் வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை ரத்து செய்து ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்துள்ளது. ஆனால் இன்னும் சில நிறுவனத்தில் சில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலேயே பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள், இது நிர்வாகத்திற்கு வருமான பாதிப்பு அதிகமாக இருக்கும் இந்த காலக்கட்டத்தில் பெரிய பிரச்சனையாக தெரிகிறது.
இந்த நிலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகளின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் return-to-office கொள்கையை கடுமையாக பின்பற்றி வருகிறது. இந்த நிலையில் அலுலகம் வராத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதனால் மெட்டா ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

மெட்டா நிறுவனத்தின் மனிதவள பிரிவின் தலைவரான Lori Goler சார்பாக அனைத்து ஊழியர்களுக்கும் return-to-office கொள்கையை குறித்தும் கட்டுப்பாடுகள் குறித்தும் விளக்கம் அறிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கையில் யாரெல்லாம் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளதோ அனைவரும் அலுவலகம் வந்து தான் பணியாற்ற வேண்டும் இல்லையெனில் வாடிக்கையாளர் அல்லது நிறுவனம் தொடர்பான சந்திப்பில் ஈடுப்பட வேண்டும். இவ்விரண்டிலும் இல்லாதவர்கள் கட்டாயம் வாரத்திற்கு 3 நாள் அலுவலகம் வர வேண்டும் என கண்டிப்பான விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் இதை ஒவ்வொரு ஊழியர் அடிப்படையில் மாதாந்திர அடிப்படையில் நிர்வாகம் கண்காணிக்கும், மேலும் ஊழியர்கள் வருகையை அனைத்து மேனேஜர்களும் பேட்ஜ் மற்றும் ஸ்டேட்டஸ் டூலில் அப்டேட் செய்து டிராக் செய்ய வேண்டும். இந்த விதிமுறையை கடைப்படிக்காத ஊழியர்கள் மீது நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.
இதன் மூலம் வருகிற செப்டம்பர் 5 முதல் in-person Time Policy நடைமுறைப்படுத்தப்பட உள்ளது, இதன் மூலம் 3 வாரத்திற்கு குறைவான வருகை பதிவு கொண்ட ஊழியர்கள் மீது கட்டாயம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளது. இந்த விதிகளை தொடர்ந்து கடைபிடிக்காமல் மீறுபவர்கள் கட்டாயம் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு, சரி செய்யாத பட்சத்தில் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக மெட்டா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications