தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? அவை கொண்டு வரப்பட்டதன் நோக்கம் என்ன?

அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குபவர் பெயர் குறிப்பிடாமல் நன்கொடை வழங்க வகை செய்யும் தேர்தல் பத்திர நடைமுறை சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வெளிப்படைத்தன்மை என்ற இலக்குடன் அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்களில் இருந்த சிக்கல் என்ன? அரசின் நோக்கம் வெற்றி பெற்றதா என்பதை விரிவாக பார்க்கலாம்.

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? அவை கொண்டு வரப்பட்டதன் நோக்கம் என்ன?

தேர்தல் பத்திரம் என்றால் என்ன?: தேர்தல் பத்திரங்கள் என்பது அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறையாகும். அரசியல் கட்சிகளுக்கு தனிநபரோ அல்லது நிறுவனங்களின் பெயரிலோ ரொக்கமாக பணம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் அதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்ற வாதம் எழுந்தது.

எனவே பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வந்த திட்டம் தான் தேர்தல் பத்திரங்கள்.

இந்திய குடிமக்கள் மற்றும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தங்களின் அடையாளத்தை வெளியிடாமல் நன்கொடை அளிக்கலாம். இதற்காக அவர்கள் குறிப்பிட்ட தொகை கொண்ட தேர்தல் பத்திரங்களை வாங்க வேண்டும். இதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு செல்லும் பணம் குறித்த வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என மத்திய அரசு கூறுகிறது.

எங்கு கிடைக்கும்: தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் மட்டுமே வாங்க முடியும். ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் குறிப்பிட்ட 10 நாட்களுக்கு மட்டும் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். அந்த 10 நாட்களை மத்திய அரசு அறிவிக்கும்.

எவ்வளவு நன்கொடை அளிக்கலாம்: பாரத ஸ்டேட் வங்கியின் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளிலிருந்து 1,000 ரூபாய், 10,000 ரூபாய், 1 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய் மற்றும் 1 கோடி ரூபாய் வரை எந்த மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம்.

இந்த தேர்தல் பத்திரங்களின் ஆயுட்காலம் 15 நாட்கள் மட்டுமே. எந்த கட்சிக்கு நன்கொடை அளிக்கப்படுகிறதோ அந்த கட்சியின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

எந்தெந்த கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கலாம்: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 29ஏ-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே நன்கொடை அளிக்க முடியும். கடந்த மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகளை பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க முடியும்.

எந்த கட்சி அதிக நிதி பெற்றுள்ளது? அண்மையில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, 2022-23ஆம் நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் 1,300 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. அதாவது பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த நன்கொடைகளில் 61% தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளது.

இதே காலகட்டத்தில் காங்கிரஸுக்கு171 கோடி ரூபாய் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக கிடைத்துள்ளது.

தேர்தல் பத்திரம் - சர்ச்சை ஏன்?: அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடைகள் குறித்த வெளிப்படைத்தன்மை இருந்தாலும் யார் நன்கொடை வழங்குவது என்பது ரகசியமாக இருக்கிறது. எனவே இது கருப்பு பணத்தை ஊக்குவிப்பதாக அமைகிறது என ஒரு தரப்பினர் இதற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். அதாவது தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் உள்ளிட்ட அடையாளம் இடம் பெறாததே சர்ச்சைக்கு காரணம்.

தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இதுவரை கட்சிகள் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து நிதிகளை பெற்றது என்ற விவரங்கள் மொத்தமாக வெளியே வரப்போகிறது.

Story written by: Devika Manivannan

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+