வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் தங்கள் கணக்கிலிருந்து அவ்வப்போது பணம் எடுக்கப்படுவதை பார்த்திருப்பீர்கள். இதைப் "பணப் பரிவர்த்தனைக் கட்டணம்" என்று கூறுவார்கள். பணம் டெபாசிட் செய்வது அல்லது பணம் எடுப்பது போன்றவற்றுக்கு வங்கிகள் வரம்புகளை வைத்திருக்கும். இந்த வரம்புகளை மீறி எப்போதெல்லாம் ஒரு வாடிக்கையாளர் பணம் எடுக்கிறாரோ? அல்லது பணம் டெபாசிட் செய்கிறாரோ? அப்போது இந்தக் கட்டணங்கள் விதிக்கப்படும்.
இது போன்ற விதிகளை தெரிந்து கொண்டு நடப்பது தேவையற்ற கட்டணங்களை தவிர்க்க உதவும். குறிப்பாக ஒவ்வொரு வங்கிக்கும் இந்த வரம்பு மாறுபடலாம். இந்தப் பதிவில் ஐசிஐசிஐ பேங்கின் பாலிசியின் படி இந்தக் கட்டணங்கள் எப்போது, ஏன் விதிக்கப்படுகிறது? என்பது குறித்து பார்ப்போம்.

நீங்கள் கணக்கு திறந்த கிளையில் பணம் டெபாசிட் செய்தால் எவ்வளவு கட்டணம்? இலவச வரம்பு உண்டா?: நீங்கள் கணக்கு தொடங்கிய கிளையில் பணம் டெபாசிட் செய்வதற்கு வரம்புகள் உண்டு. ஒவ்வொரு மாதமும் 3 இலவச பணம் டெபாசிட் செய்யும் வசதி மற்றும் பணம் எடுக்கும் வசதி அனுமதிக்கப்படுகிறது. இந்த இலவச வரம்பை மீறி செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதலாக நீங்கள் செய்யும் ரொக்கப் பரிவர்த்தனை ரூ. 1 லட்சத்தை தாண்டியிருந்தால் ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
உதாரணமாக ஒரு மாதத்தில் ரூ. 1.5 லட்சம் ரொக்கமாக டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ரூ.1 லட்சம் வரம்பை மீறி ரூ.50,000 மீதம் இருக்கும். இந்த ரூ. 50,000-த்திற்கு, 1,000 ரூபாய்க்கு ரூ.5 என்ற வீதத்தில் 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதலாக ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக டெபாசிட் செய்து பணப்பரிவர்த்தனை செய்தால் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்..
கணக்கு தொடங்கிய கிளை அல்லாத பிற கிளைகளில் பணம் டெபாசிட் செய்தால் கட்டணம் எவ்வளவு?: நீங்கள் கணக்கு தொடங்கிய கிளைகளில் பணம் டெபாசிட் செய்யாமல் வேறு கிளையைத் தேர்ந்தெடுத்து டெபாசிட் செய்தால், அதற்கும் வரம்புகள் பொருந்தும். வேறு கிளைகளில் ஒரு நாளைக்கு ரூ. 25,000த்திற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால் ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் 5 ரூபாய் அல்லது 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படலாம். நீங்கள் வைத்திருக்கும் சேமிப்பு கணக்கின் வகையைப் பொறுத்து இந்தக் கட்டணம் மாறுபடலாம். ஸ்பெஷல் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு வெவ்வேறு வரம்புகள் மற்றும் கட்டண விலக்குகள் இருக்கலாம்.
அதேபோல உங்கள் சொந்தக் கணக்கில் ஒரு நாளைக்கு எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம், வரம்பை மீறும் பட்சத்தில் மேலே கூறப்பட்டுள்ள கட்டணங்கள் பொருந்தும். ஆனால் நீங்கள் வேறு ஒருவருக்காக பணம் டெபாசிட் செய்தால் அதற்கான தினசரி வரம்பு ரூ. 25,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சில நேரங்களில் எதற்காக பணம் எடுக்கப்பட்டது என்பதை தெரியாமல் சிலர் புலம்புவார்கள். எனவே உங்கள் வங்கியில் இது போன்ற கட்டணங்கள் இருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொண்டால் எதற்காக கட்டணம் கழிக்கப்பட்டது? என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications