நடப்பு நவம்பர் மாதம் என்பது இன்றோடு முடிவடையவுள்ள நிலையில், நாளை டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இந்த டிசம்பர் மாதத்தில் பல நிதி ரீதியான மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன.
அது என்னென்ன மாற்றங்கள்? இதனால் சாமானிய மக்களுக்கு என்ன பலன்? இதனால் என்ன பாதிப்பு? நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பொதுவாக ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சர்வதேச சந்தையினை பொறுத்து சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும். இது மட்டும் அல்ல நாளை முதல் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன. அது என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.
சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும். இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் விலையினை பொறுத்து மாற்றம் இருக்கலாம். இது நேரடியாக சாமானியர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே வணிக ரீதியிலான சிலிண்டர் விலை மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இருக்குமா? என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஆயுள் சான்றிதழ்
ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் ஆயுள் சான்றினை சமர்பிக்க வேண்டும். இந்த ஆயுள் சான்றிதழை சமர்பிக்க நவம்பர் 30ம் தேதியன்று கடைசி தேதியாகும். ஆக இதற்குள் சமர்பிக்கப்படாவிட்டால், அது ஓய்வூதியம் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
ரயில்கள் நேரம் மாற்றம்
பொது போக்குவரத்துகளில் இன்னும் மக்கள் மத்தியில் பிரதானமாக இருப்பது ரயில் போக்கு வரத்து தான். இதில் கட்டணமும் குறைவு.அதே சமயம் நீண்டதூரம் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும் என்பதால் இது சாமானியர்கள் மத்தியில் விருப்பமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் பல ரயில்களின் நேரம் என்பது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆக நீங்கள் பயணம் செய்ய நினைக்கும் முன்பு இதனை முழுமையாக தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது நல்லது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது KYC அப்டேஷனை டிசம்பர் 12ம் தேதிக்குள் அப்டேட் செய்யப்பட வேண்டும். அப்படி சரியான நேரத்தில் செய்யப்படாவிட்டால், உங்கள் பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்படலாம். ஏற்கனவே போதிய கால அவகாசத்தினை கொடுத்துள்ள நிலையில், இந்த முறை நீட்டிப்பு இருக்குமா? என்பதும் கேள்வியாக உள்ளது. இதனை ஆன்லைனிலும் செய்து கொள்ளலாம். ஆன்லைனில் செய்ய முடியாதவர்கள் வங்கிக் கிளையிலும் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம்.
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான TANGEDCO, நுகர்வோர் அனைவரும் ஆதாரை டிஎன்இபி கணக்குடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இதனால் தமிழக மின் நுகர்வோர் டிஎன்இபி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கும் செயல்முறையை https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணைய பக்கத்தில் சென்று செய்யலாம். இதை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டால், எதிர்காலத்தில் மின்சார கட்டணம் செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
எப்படி இணைப்பது?
இதனை உங்களது மின்சார இணைப்பு எண்ணை (Service Connection Number) பதிவிட வேண்டியிருக்கும். இதன் பிறகு ஓடிபி ஜெனரேட் செய்ய வேண்டி இருக்கும்.
அதற்கு முன்னதாக வாடிக்கையாளரின் பெயர் என்ன?? ஆதாரில் உள்ளபடி உள்ளதா? ஆதார் ஐடி என்ன? என்பதை கொடுத்து, ஆதாரினையும் அப்லோடு செய்ய வேண்டியிருக்கும். இதனை கொடுத்து சப்மிட் செய்த பிறகு அக்னாலெட்ஜ்மென்ட் ரசீதை பெறவும். அப்படி இல்லை எனில் நேரடியாக சென்றும் இணைக்கலாம். இதற்கான சிறப்பு முகாம்கள் டிசம்பர் 31 வரையில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications