அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியில் டிக்டாக் பல்வேறு வர்த்தக பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில், பைடன் அரசு டிக்டாக் நிறுவனம் மீதான தடை குறித்து அதிரடியாக நடவடிக்கை எடுக்காமல் நிதானமாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில் அமெரிக்காவில் டிக்டாக் தளத்தில் தொடர்ந்து பல லட்ச வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்து வரும் நிலையில், அமெரிக்க வாடிக்கையாளர்களின் தரவுகளை கையாள டிக்டாக் மாஸ்டர் பிளான் போட்டுள்ளது.
இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு டிக்டாக் மீதான தடையை நீக்க பைடன் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், எவ்விதமான தளர்வுகளையும் பைடன் அரசு காட்டவில்லை. இது டிக்டாக் நிறுவனத்திற்கும் பெரும் தடையாக மாறிவிட்டது.
இதேவேளையில் டிக்டாக் செயலி Committee on Foreign Investment in the US (CFIUS) அமைப்பிடம் ஒரு ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் மூலம் டிக்டாக்-ன் அமெரிக்கத் தரவுகளை ஒரு 3ஆம் தரப்பு நிறுவனம் நிர்வாகம் செய்யும். இந்த நிர்வாக மாடலுக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்தால் டிக்டாக் நிறுவனத்தை ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் தேவையில்லை எனப் புதிதாகத் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். டாக் மீது டிரம்ப் அரசு அடுத்தடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் உத்தரவுகளைத் தற்போது பைடன் அரசு ஆய்வு செய்வதாகத் தெரிகிறது.
மேலும் இந்தியாவில் சீன செயலிகளுக்கு எதிராக எடுத்த இந்திய அரசு நடவடிக்கைகளின் படி டிக்டாக், ஹீலோ, ஷேர்இட் ஆகிய முன்னணி செயலிகள் மீது நிரந்தர தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications