பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்யும் போது மக்கள் மத்தியில் பணப்புழக்கத்திற்கு எவ்விதமான பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டதற்கான நோக்கம் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் கிளீன் நோட்டு பாலிசி கீழ் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ஆர்பிஐ வெளியிட்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் மக்களை வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக மாற்று மதிப்புக்கொண்ட ரூபாய் நோட்டுகளை பெற வலியுறுத்தியது.

ஆர்பிஐ கொடுத்த காலஅவகாசம் பல பிரச்சனைகளை தீர்த்து மட்டும் அல்லாமல் வெறும் 2 மாதத்தில் சந்தையில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 88 சதவீதம் திரும்ப வங்கி அமைப்பிற்குள் வந்துள்ளது என ஆர்பிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதேவேளையில் சந்தையில் போதுமான பணப்புழக்கத்திற்கு நிதி உட்செலுத்தப்பட்டு உள்ளது.
ஜூலை 31 ஆம் தேதி தரவுகள் படி ஆர்பிஐ சுமார் 3.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் திரும்பபெறப்பட்டு உள்ளது. இப்படி பெறப்பட்ட பணத்தில் 87 சதவீதம் வங்கி வைப்பு நிதியாக அல்லது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. வெறும் 13 சதவீதம் மட்டுமே மாற்று ரூபாய் நோட்டுகளாக அளிக்கப்பட்டு உள்ளது.
மார்ச் 31 ஆம் தேதி தரவுகள் படி சுமார் 3.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது, மே 19 (2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவதாக ஆர்பிஐ வெளியிட்ட நாள்) ஆம் தேதி இது 3.56 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது. தற்போது 3.14 லட்சம் ரூபாய் திரும்பபெறப்பட்ட நிலையில் எஞ்சியுள்ளது வெறும் 42000 கோடி ரூபாய் மட்டுமே.
ஆர்பிஐ விபரங்கள் படி ஒரு நாளுக்கு சராசரியாக 1.6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையை ஜூலை மாதம் திரும்ப பெறப்பட்டு உள்ளது. 2000 ரூபாய் தொகையை திரும்ப பெறப்படுவது மூலம் ஆர்பிஐ வங்கிகளுக்கு கூடுதல் நிதி தொகையை அளித்துள்ளது, இதன் மூலம் வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது தடுக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications