இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு (MPC) மீண்டும் ரெப்போ விகிதத்தை 6.5% ஆக வைத்திருக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்ச்சியாக 11வது கூட்டமாக ஓரே ரெப்போ விகிதம் நடைமுறையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவு இந்தியாவில் வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ரெப்போ விகிதம் என்பது வணிக வங்கிகள் தங்கள் கடன் விகிதங்களை நிர்ணயிப்பதற்கான முக்கிய அளவுகோலாகும். RBI ரெப்போ விகிதத்தை மாற்றிமின்றி 6.5 சதவீதமாக வைத்திருக்கும் போது, பொதுவாக வங்கிகளும் வீட்டு கடன்களின் வட்டி விகிதங்களை மாற்றாது.

ரெப்போ விகிதத்தை அடிப்படையாக கொண்டு தான் வங்கிகள் வீட்டுக் கடன், கார் லோன், பைக் லோன், தனிநபர் கடன் என அனைத்தையும் வழங்குகிறது. இந்த நிலையில் தான் 11வது முறையாக ஆர்பிஐ வட்டி விகிதங்கள் மாற்றாமல் அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு நன்மை பயக்கும், ஏனெனில் அவர்களின் மாத EMI மாறாமல் இருக்கும். இதேபோல் புதிதாக வீட்டு கடன் பெற திட்டமிடுபவர்களுக்கு, நிலையான வட்டி விகித சூழல் ஈஎம்ஐ தொகையில் உறுதிப்பாட்டை வழங்கலாம்.
இருப்பினும், வங்கிகள் தங்கள் தனிப்பட்ட நிதி செலவு மற்றும் அபாய மதிப்பீடுகள் அடிப்படையில் வட்டி விகிதங்களை அதிகரிக்கலாம். சமீபத்தில் பெரும்பாலான வங்கிகள் நிதி திரட்டும் நோக்கத்துடன் பல முயற்சிகளை மேற்கொண்டது. இந்த நிலையில் வங்கிகள் ஆர்பிஐ முடிவுகளுக்கு பின்பு தனது வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த முடிவு ஒவ்வொரு வங்கிக்கும் மாறுப்படும்.
RBI ரெப்போ விகிதத்தை பராமரிக்க வேண்டும் என்ற முடிவு பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு வங்கிகள் தான் அதன் முடிவை எடுக்கும். ஆர்பிஐ வட்டியை குறைத்தால் வங்கிகள் வட்டியை குறைக்க வேண்டும் என்ற அவசியம் துளியும் கிடையாது. எனவே வீட்டு கடன் வாங்கும் போது நிதி ஆலோசகர்களுடன் கலந்தாலோசிப்பது நல்லது.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நிறைவுறும் நிலையில், அவரது மறு நியமனம் குறித்து மத்திய அரசு இதுவரையில் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த முறை பிரதமர் அலுவலகம் சுமார் 1 மாதம் முன்னரே பதவி காலம் நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
இதனால் சக்திகாந்த தாஸ்-ன் கடைசி MPC கூட்டமாக இது இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications