2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். நேற்று துவங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி முழுப் பட்ஜெட் என்பதால் அனைத்து தரப்பினருக்கும் சாதகமான அறிவிப்பை வெளியிட வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதனால் மக்கள் மத்தியிலும் அதிகப்படியான எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் வருமான வரியில் கிடைக்கப்போகும் முக்கியமான அறிவிப்பு என்னவாக இருக்கும்.
மாத சம்பளகாரர்கள்
மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு 2022 ஆம் ஆண்டு முதல் பல அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பால் நடுத்தரப் பொருளாதாரப் பிரிவில் இருக்கும் மக்கள் பெரும் தொகையை வரிக்கும் விலைவாசி உயர்வுக்குமே இழந்து வருகின்றனர்.
நிர்மலா சீதாராமன்
இந்த நிலையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள 2023 மத்திய பட்ஜெட்டில் தற்போது அளிக்கப்பட்டு வரும் அடிப்படை வருமான வரி விலக்கான 2.5 லட்சம் ரூபாய் அளவீட்டை உயர்த்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்படுகிறது.
வருமான வரி விலக்கு வரம்பு
அதிலும் முக்கியமாகத் தற்போதைய விலைவாசி உயர்வைச் சமாளிக்க அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த பல தரப்பினர் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.
வரிப் பலகை
மக்களின் சுமையைச் சமாளிக்கும் வகையில் தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சியாக வருமான வரி விதிப்பு முறையில் கூடுதலாக வரிப் பலகை சேர்க்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்குமா என்பது சந்தேகம் தான்.
பழைய மற்றும் புதிய வரி விதிப்பு
தற்போது பழைய வருமான வரி விதிப்பில் 4 வரிப் பலகையில் 0, 5, 25, 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. புதிய வருமான வரிப் பலகையில் 7 பலகையில் 0-30 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
80சி பிரிவு
இதேபோல் 80சி பிரிவின் கீழ் வருடம் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வரிச் சலுகை அளிக்கப்படும் வேளையில், இதைக் கணிசமாக உயர்த்த வாய்ப்பு உள்ளதாகக் கருத்து நிலவுகிறது. இதைப் பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் உறுதி செய்யலாம்.
புதிய வீடு
புதிய வீடு வாங்குவோருக்கு மிக முக்கியமான சலுகையும், தளர்வுகளையும் அறிவிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக மலிவு விலை வீடு வாங்குவோருக்கான சலுகை இந்தப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
ஹோம் லோன்
வீட்டு கடன் வாங்கியவர்கள் செலுத்தும் ஈஎம்ஐ தொகையில் முக்கியமான வரிச் சலுகை அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக வாங்கிய கடனுக்குச் செலுத்தப்படும் வட்டி தொகைக்கு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் சலுகை அளிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் நடுத்தர மக்களுக்குக் கூடுதலான சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஹெல்த் இன்சூரன்ஸ்
இந்தப் பட்ஜெட் அறிக்கையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரிவுக்குத் தனிப் பிரிவும், அளவீடும் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications