டெல்லி: ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய தினத்தில் பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்தியாவின் நிதிநிலை அறிக்கையின் முன்னோட்டமாகவே இந்த பொருளாதார ஆய்வு அறிக்கை பார்க்கப்படுகிறது.
பொருளாதார ஆய்வு அறிக்கை என்பது அந்த குறிப்பிட்ட நிதியாண்டில் அரசின் நிதி செயல்பாடு எப்படி இருந்தது, இந்திய பொருளாதாரம் எப்படி செயல்பட்டது என்பதை வெளிப்படுத்தக்கூடிய ஒரு அறிக்கையாகும். அது தவிர வரக்கூடிய ஆண்டில் அரசு என்னென்ன கொள்கை மாற்றங்களை கொண்டுவர இருக்கிறது என்பதற்கான குறிப்புகளும் இதில் இடம் பெறும்.

ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும். இதன் அடிப்படையில் நாம் பட்ஜெட் எப்படி இருக்கும் என்ற ஒரு கணிப்புக்கு வந்து விட முடியும்.
எனவே தான் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு பொருளாதார ஆய்வு அறிக்கை மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு தலைமை பொருளாதார ஆலோசகரும் நிதி அமைச்சகத்தை சேர்ந்து மூத்த அதிகாரிகளும் செய்தியாளர்களை சந்திப்பர்.
வரவிருக்கும் பொருளாதார ஆய்வு அறிக்கையின் கருப்பொருள் பல்வேறு துறைகளில் இருக்கும் ஒழுங்குமுறைகளை தளர்த்துவதாக இருக்கும் என கடந்த டிசம்பர் 6ஆம் தேதி தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
பொருளாதார ஆய்வு அறிக்கை என்பது அரசாங்கத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரனின் மேற்பார்வையில் பொருளாதார விவகாரங்கள் துறை தயாரிக்கும் ஒரு வருடாந்திர அறிக்கையாகும். கடந்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் நிலை எப்படி இருந்தது என்பது இதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். பொருளாதார ஆய்வு அறிக்கை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கும்.
முதல் பிரிவில் பொருளாதாரம் தொடர்பான ஒரு விரிவான பார்வையும், அந்த குறிப்பிட்ட ஓர் ஆண்டு காலத்தில் நாட்டில் நிகழ்ந்த முக்கியமான பொருளாதார மேம்பாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். இரண்டாவது பிரிவில் சமூக பாதுகாப்பு, வறுமை, கல்வி, சுகாதாரம் ,மனிதவள மேம்பாடு, சுற்றுச்சூழல் தொடர்பான விவரங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். இது தவிர இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி, பணவீக்க விகிதம் ,வெளிநாட்டு கரன்சி கையிருப்பு, வர்த்தக பற்றாக்குறை உள்ளிட்ட முக்கியமான புள்ளி விவரங்களையும் இதில் எதிர்பார்க்கலாம்.
முதன்முறையாக 1950 - 51 ஆம் நிதியாண்டில் தான் இந்தியாவில் பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது மத்திய பட்ஜெட் உடனேயே பொருளாதார ஆய்வு அறிக்கையும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டது. 1964ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் பட்ஜெட்டுக்கு முந்தைய தினம் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யும் பழக்கம் கொண்டுவரப்பட்டது. பொதுவாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படாது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications