சென்னை: பல ஊழியர்களும் கிராஜுவிட்டி என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஆனால் அதன் முழு விளக்கம் தெரியாமல் கூட இருக்கலாம். அதுபோன்ற நபர்களுக்காகத்தான் இந்தப் பதிவு. கிராஜுவிட்டி என்றால் என்ன.. அவை எவ்வாறு கணக்கிடப்படுகிறது.. யாரெல்லாம் தகுதி உடையவர்கள்.. என்பதைப் பார்ப்போம் வாங்க.
கிராஜுவிட்டி என்றால் என்ன?: கிராஜுவிட்டி என்பது ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களைப், பணி ஓய்வு பெறும்போது கௌரவிக்கும் வகையில் கொடுக்கப்படும் தொகையாகும்.

ஒரே நிறுவனத்தில் நீண்ட காலமாக வேலை பார்க்கும் ஒரு ஊழியர், ஏதோ ஒரு காரணத்தினால் வெளியேறும் போது அவருக்கு வழங்கப்படும் தொகை கிராஜுவிட்டி தொகை என்று கூறப்படுகிறது. சரி இப்பொழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்.. கிராஜுவிட்டி தொகை அரசு ஊழியருக்கும் உள்ளதா என்று.. நீங்கள் அரசு ஊழியராக இருந்தாலும் சரி, தனியார் ஊழியராக இருந்தாலும் சரி, கிராஜுவிட்டி தொகை ஒரே மாதிரி தான் கணக்கிடப்படுகிறது. மேலும் அரசு ஊழியர்களுக்கும் கிராஜுவிட்டி தொகை உண்டு.
சமீபத்தில் அலகாபாத் நீதிமன்றம் ஒரு ஊழியர் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற விரும்பினால் அல்லது அவருடைய 62 ஆவது வயதில் ஓய்வு பெற்றால், அவருக்கு இரண்டில் எது நடந்தாலும் கிராஜுவிட்டி தொகை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
எப்போது கிராஜுவிட்டி தொகை வழங்கப்படும்?: ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த சிறப்பு தொகை ஒரு ஊழியர் அதே நிறுவனத்தில் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்தால் அவர் கிராஜுவிட்டி பெற தகுதியுடையவர். அனைத்து அரசு ஊழியர்களும் தனியார் ஊழியர்களும் இத்திட்டத்தின் மூலம் பலனை பெறுகின்றனர்.
அதுவே, ஒரு ஊழியர் சுரங்கத்தில் பணிபுரிந்து 4 ஆண்டுகள் 190 நாட்களைப் பணியாற்றி முடித்து விட்டால், அவருக்கும் கிராஜுவிட்டி வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அதாவது 4 வருடம் 8 மாதங்களில், இது போன்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். வேலை செய்யும் போது, இந்த கிராஜுவிட்டி தொகையை நீங்கள் பெற முடியாது. நீங்கள் நிறுவனத்தில் இருந்து ரிசைன் செய்யும் போது, இந்த தொகை கிடைக்கும்.
இந்த கிராஜுவிட்டி சட்டம், நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள், எண்ணெய் நிறுவனங்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில்வே ஆகியவற்றுக்குப் பொருந்தும். ஏதோ ஒரு நிறுவனத்தில் 10 பேருக்கு மேல் பணி புரிந்தால் அவருக்கும் கிராஜுவிட்டியின் பலன் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எவ்வாறு கணக்கிடப்படுகிறது?: இதனை மிக எளிமையாக கணக்கிடலாம் உங்களுடைய அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் நீங்கள் எளிதாக கிராஜுவிட்டியை கணக்கிடலாம். இதற்கு ஒரு ஃபார்முலா பயன்படுத்தப்படுகிறது.
கிராஜுவிட்டி = அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி x (15/26) x (நீங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்த ஆண்டுகளின் எண்ணிக்கை).
உதாரணமாக உங்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ரூ. 35,000 என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்த நிறுவனத்தில் 7 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கிறீர்கள்.. என்றால், உங்களின் மொத்த கிராஜுவிட்டி தொகை = 35,000 x (15/26) x 7 = ரூ. 1,41,346.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications