சென்னை: இந்தியாவில் அண்மைக்காலமாக ஆன்லைன் மோசடி மூலம் ஏராளமான மக்கள் தங்களுடைய பணத்தை இழப்பது தொடர்கதையாகி வருகிறது. ஆனால் முதலுக்கு மோசம் இல்லாத பண வீக்கத்தை விட அதிகமான லாபம் தரக்கூடிய பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நம்முடைய அஞ்சல் அலுவலகங்கள் வாயிலாக நமக்கு கிடைக்கின்றன. அப்படி மாதம் தோறும் கணிசமான தொகையை வட்டி வருமானமாக வழங்கக்கூடிய ஒரு அருமையான தபால் நிலைய திட்டம் குறித்து தான் நாம் தற்போது தெரிந்து கொள்ள போகிறோம்.
நம்முடைய அஞ்சல் அலுவலகங்கள் வாயிலாக பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களும் கிடைக்கின்றன. இதில் நம்முடைய முதலீட்டு தொகை முழுமையாக பாதுகாப்பாக இருக்கும் என்பதால் மக்கள் நம்பி இவற்றில் முதலீடு செய்யலாம். அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம்.

இந்தத் திட்டத்தில் நாம் ஒரு கணிசமான தொகையை டெபாசிட் செய்து விட்டால் மாதம் தோறும் வட்டி தொகையானது நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.
பொதுவாக பணி ஓய்வு பெற்று ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் தோறும் ஒரு தொகை அவர்களுக்கு வட்டியாக கிடைக்கும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு தனிநபர் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை தனிக் கணக்கில் முதலீடு செய்யலாம். இதுவே கூட்டுக்கணக்காக இருந்தால் அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை இதில் முதலீடு செய்ய முடியும்.
இவ்வாறு முதலீடு செய்யும் தொகைக்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் தொகையானது வட்டியாக கிடைக்கும். இந்த வட்டி தொகை 12 மாதங்களுக்கும் பிரித்து உங்களுடைய தபால் நிலைய சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் ஒரு நபர் ஈட்டக்கூடிய வட்டியானது வருமான வரி கணக்குக்கு உட்பட்டது.
இதில் முதலீடு செய்தவர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு முதலீட்டை பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. ஓராண்டுக்குள் இந்த பணத்தை திரும்ப எடுக்க முடியாது 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் இந்த டெபாசிட் கணக்கை திரும்ப பெற்றுக் கொண்டால் பிரின்சிபல் தொகையில் இரண்டு சதவீத தொகை குறைக்கப்பட்டு வழங்கப்படும்.
3 முதல் 5 ஆண்டுகளுக்குள் எடுத்துக் கொண்டால் 1 சதவீத தொகை பிரின்சிபல் தொகையிலிருந்து குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒரு தனிநபர் அதிகபட்சம் 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்கிறார் எனும் போது அவருக்கு அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு மாதந்தோறும் 5,550 ரூபாய் வட்டி வருமானமாக கிடைக்கும்.
கூட்டு கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரை அதிகபட்சமாக முதலீடு செய்யலாம் என்பதால் இதில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு ஐந்தாண்டு காலத்திற்கு மாதத்திற்கு 9,250 வட்டி வருமானமாக அவர்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படும்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications