ஒவ்வொரு மிடில் கிளாஸ் மக்களுக்கும் தாங்கள் லட்சாதிபதிகள் அல்லது கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கும்.
அந்த கனவை நிறைவேற்ற வேண்டுமென்றால் ஒரு மிடில்கிளாஸ் நபர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் ஒரு நாள் கண்டிப்பாக கோடீஸ்வரர் ஆகிவிடலாம்.
15X15X15 என்ற திட்டம் தான் அதற்கு உதவியாக இருக்கும் என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். இந்த திட்டம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
சேமிப்பு
பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், வட்டி விகித உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் மிடில்கிளாஸ் மக்களால் சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இருப்பினும் சேமிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் முக்கிய செலவுகளை மட்டும் செய்துவிட்டு அவசியமற்ற செலவுகளை நீக்கி விட்டால் கண்டிப்பாக குறைந்த வருமானம் உள்ளவர்கள் கூட சேமிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடீஸ்வரர் ஆவது எப்படி?
ஒருவர் தனது வருமானத்தில் 30 சதவீதம் சேமிக்க வேண்டும் என்பதே நிதி ஆலோசகர்களின் அறிவுரையாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் சம்பளம் கிடைத்தவுடன் 30 சதவீதத்தை சேமிப்பு என்ற செலவிற்கு ஒதுக்க வேண்டும் என்றும் அவ்வாறு ஒதுக்கினால் கண்டிப்பாக அந்த நபர் வெகுவிரைவில் கோடீஸ்வரர் ஆகிவிடுவார் என்பதுதான் நிதி ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது.
15X15X15 திட்டம்
இந்த நிலையில் மிடில் கிளாஸ் மக்களும் கோடீஸ்வரர் ஆவதற்கு உள்ள திட்டம்தான் 15X15X15. இது மியூச்சுவல் பண்டில் பின்பற்றப்படுகிறது. குறைந்த முதலீட்டில் கோடீஸ்வரர் ஆகுவதற்கு இதுவே மிகச்சிறந்த திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. மியூச்சுவல் ஃபண்ட்டை பொருத்தவரை சராசரியாக 15 சதவீத வருவாய் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் 15 சதவீத வருவாய் தரும் திட்டத்தை தேர்வு செய்து மாதம் 15,000 ரூபாய் சேமித்தால் 15 ஆண்டுகளில் அவருக்கு ஒரு கோடி கிடைக்கும். இதுதான் 15X15X15 என்ற திட்டமாகும்.
ரூ.1 கோடி
பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்டகால அடிப்படையில் ஆண்டுக்கு 15 சதவீத வருமானத்தை கொடுக்கும் பல்வேறு திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ளன. எனவே 15% வருமானம் கொடுக்கும் நீண்டகாலத் திட்டம் எது என்பதை உங்கள் நிதி ஆலோசகரிடம் கலந்து ஆலோசித்து மாதம் 15,000 ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் கண்டிப்பாக உங்கள் கையில் ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
முதலீடும் வட்டியும்
ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்டில் வட்டி கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பதும், அந்த வட்டியும் அசலும் சேர்ந்து முதலீடு அதிகரித்து கொண்டே இருக்கும் என்பதும், அதனால்தான் ஒவ்வொரு மாதமும் உங்களது அசல் தொகை மற்றும் வட்டி தொகை ஆகியவை குட்டி போட்டுக்கொண்டே உங்கள் முதலீட்டை பெருக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றே நீங்கள் 15 சதவீத வட்டி திட்டத்தை தேர்வு செய்து மாதம் 15,000 ரூபாய் 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் 2037ஆம் ஆண்டு நீங்களும் கோடீஸ்வரர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications