மியூச்சுவல் ஃபண்ட் என்பது இந்தியா மட்டுமின்றி உலக அளவில் தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாத கணக்கின்படி உலக அளவில் 76.27 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மியூச்சுவல் ஃபண்டில் மட்டும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் முதல்முறையாக மியூச்சுவல் ஃபண்ட் எப்போது தொடங்கப்பட்டது? இந்தியாவின் முதல் மியூச்சுவல் ஃபண்ட் எது என்பதை தற்போது பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட்
உலக அளவில் மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒன்று திரட்டப் பட்ட முதலீடுகள் என்ற வகையில் 1924-ஆம் ஆண்டு முதலீட்டாளர்களின் அறக்கட்டளை உருவாக்கப்பட்டதில் இருந்து தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. பரந்த நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இருந்தது என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட் பிரபலமானது.
வியக்கத்தக்க வளர்ச்சி
ஒரு குறிப்பிட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகளில் வியக்கத்தக்க வளர்ச்சி காரணமாக முதலீட்டாளர்கள் உலக அளவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தனர். ஒழுங்கு முறையை சரியாக கடைபிடித்ததால் முதலீட்டாளரின் முதலீட்டுக்கு பாதுகாப்பு மற்றும் நிதி நிர்வாகத் துறையின் கண்காணிப்பு ஆகியவை முதலீட்டின் பாதுகாப்பை உறுதி செய்தது.
அதிக லாபம்
மியூச்சுவல் ஃபண்டில் பல்வேறு புதிய புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பட்டதால் நீண்ட கால முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட்
இந்தியாவை பொருத்தவரை 1963ஆம் ஆண்டில் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா நிறுவப்பட்ட பின்தான் மியூச்சுவல் ஃபண்ட் என்ற முறை தொடங்கப்பட்டது. இந்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி மூலம் யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா அமைக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் மியூச்சுவல் ஃபண்ட்
கடந்த 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் 'யூனிட் திட்டம் 64' என்ற முதல் மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதான் இந்தியாவின் முதல் மியூச்சுவல் ஃபண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத்துறை வங்கிகள்
1987 ஆம் ஆண்டு மியூச்சுவல் ஃபண்ட் தொடங்குவதற்கு பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.அதன்பின்னர் 1993ஆம் ஆண்டில் உலக தாராளமயமாக்கம் ஏற்பட்டதை அடுத்து தனியார் துறையும் பன்னாட்டு அமைப்புகளும் மியூச்சுவல் ஃபண்டுகளை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பொதுமக்கள் மத்தியில் பிரபலம்
தற்போது மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு முறை என்பது மிக வேகமாக விரிவடைந்து வருகிறது என்பதும் நிபுணத்துவம் அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தான் பொதுமக்கள் மத்தியில் மிக வேகமாக மியூச்சுவல் ஃபண்ட் பிரபலமாகி வருகிறது.
ரூ.37.7 லட்சம் கோடி
கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி கணக்கின்படி இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு ரூ.37.7 லட்சம் கோடியைத் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications