மியூச்சுவல் ஃபண்ட் என்பது இந்தியா மட்டுமின்றி உலக அளவில் தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாத கணக்கின்படி உலக அளவில் 76.27 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மியூச்சுவல் ஃபண்டில் மட்டும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் முதல்முறையாக மியூச்சுவல் ஃபண்ட் எப்போது தொடங்கப்பட்டது? இந்தியாவின் முதல் மியூச்சுவல் ஃபண்ட் எது என்பதை தற்போது பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட்
உலக அளவில் மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒன்று திரட்டப் பட்ட முதலீடுகள் என்ற வகையில் 1924-ஆம் ஆண்டு முதலீட்டாளர்களின் அறக்கட்டளை உருவாக்கப்பட்டதில் இருந்து தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. பரந்த நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இருந்தது என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட் பிரபலமானது.
வியக்கத்தக்க வளர்ச்சி
ஒரு குறிப்பிட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகளில் வியக்கத்தக்க வளர்ச்சி காரணமாக முதலீட்டாளர்கள் உலக அளவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தனர். ஒழுங்கு முறையை சரியாக கடைபிடித்ததால் முதலீட்டாளரின் முதலீட்டுக்கு பாதுகாப்பு மற்றும் நிதி நிர்வாகத் துறையின் கண்காணிப்பு ஆகியவை முதலீட்டின் பாதுகாப்பை உறுதி செய்தது.
அதிக லாபம்
மியூச்சுவல் ஃபண்டில் பல்வேறு புதிய புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பட்டதால் நீண்ட கால முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட்
இந்தியாவை பொருத்தவரை 1963ஆம் ஆண்டில் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா நிறுவப்பட்ட பின்தான் மியூச்சுவல் ஃபண்ட் என்ற முறை தொடங்கப்பட்டது. இந்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி மூலம் யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா அமைக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் மியூச்சுவல் ஃபண்ட்
கடந்த 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் 'யூனிட் திட்டம் 64' என்ற முதல் மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதான் இந்தியாவின் முதல் மியூச்சுவல் ஃபண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத்துறை வங்கிகள்
1987 ஆம் ஆண்டு மியூச்சுவல் ஃபண்ட் தொடங்குவதற்கு பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.அதன்பின்னர் 1993ஆம் ஆண்டில் உலக தாராளமயமாக்கம் ஏற்பட்டதை அடுத்து தனியார் துறையும் பன்னாட்டு அமைப்புகளும் மியூச்சுவல் ஃபண்டுகளை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பொதுமக்கள் மத்தியில் பிரபலம்
தற்போது மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு முறை என்பது மிக வேகமாக விரிவடைந்து வருகிறது என்பதும் நிபுணத்துவம் அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தான் பொதுமக்கள் மத்தியில் மிக வேகமாக மியூச்சுவல் ஃபண்ட் பிரபலமாகி வருகிறது.
ரூ.37.7 லட்சம் கோடி
கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி கணக்கின்படி இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு ரூ.37.7 லட்சம் கோடியைத் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications