கொரோனா வைரஸ் முதலில் ஒரு லட்சம் பேரை பாதிக்க சுமாராக 67 நாட்கள் ஆனது. அடுத்த 11 நாட்களில் 1 லட்சம் பேரை பாதித்துவிட்டது.
அடுத்த 4 நாட்களில் இன்னும் ஒரு லட்சம் பேரை பாதித்து ஒட்டு மொத்த உலகத்தையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.
ஆக தற்போது சுமாராக நான்கு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 17,500 பேர் மரணித்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் இதுவரை சுமாராக 518 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 10 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். மேற்கொண்டு இந்த தொற்று நோய் இந்தியாவில் பரவாமல் இருக்க, மத்திய அரசு, அடுத்த 21 நாட்களுக்கு லாக் அடவுன் அறிவித்து இருக்கிறார்கள். இந்த லாக் டவுன் இன்று இரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.
எரிபொருள்
இந்த 21 நாட்கள் லாக் டவுனில் வாகனங்களில் இயக்கத்துக்கு அவசியமான, பெட்ரோல், டீசல், சி என் ஜி கேஸ், எல் பி ஜி கேஸ், பி என் ஜி கேஸ் சேவை வழங்குபவர்கள். இதைத் தாண்டி மின்சாரம், அஞ்சலக அலுவலகங்கள், சமையல்
கேஸ் கம்பெனிகள் எல்லாம் செயல்படுமாம்.
மருத்துவத் துறை
மருத்துவமனைகள், மருத்துவ அமைப்புகள், மருந்து கம்பெனிகள், மருந்துகளை சப்ளை செய்யும் கம்பெனிகள், மருந்து விற்பவர்கள், மருத்துவ சாதனங்களை விற்கும் கடைகள், மருத்துவ பரிசோதனைச் சாலைகள், க்ளினிக், நர்சிங் ஹோம்கள், ஆம்புலன்ஸ் போன்ற சேவைகள் வழக்கம் போலச் செயல்படும்.
ரேஷன் கடைகள்
மிக முக்கியமாக ஏழை எளிய மக்கள் பசியை போக்கும் அரசின் ரேஷன் கடைகள் செயல்படுமாம். இது போக உணவு சம்பந்தப்பட்ட கடைகள், மளிகைக் கடைகள், காய்கறி மற்றும் பழக் கடைகள், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் போன்றவைகளுக்கு விதி இவ்லக்கு அளித்து இருக்கிறார்கள்.
நிதி சேவைகள்
இந்த இக்கட்டான நேரத்தில் கூட வங்கிகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள், ஏடிஎம் இயந்திரங்கள், பத்திரிகைகள், டெலிகாம் சேவைகள், இணைய சேவைகள், கேபிள் சேவைகள், வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யும் இ காமர்ஸ் நிறுவனங்கள் (உணவு, மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள்) போன்றவைகளுக்கும் விதி விலக்களித்து இருக்கிறது அரசு.
பங்குச் சந்தை
மிக முக்கியமாக ரத்த ஆறாக ஓடிக் கொண்டு இருக்கும் பங்குச் சந்தைகள் மற்றும் கடன் பத்திரச் சந்தைகள் வழக்கம் போல வர்த்தகம் ஆகுமாம். இதோடு தனியார் செக்யூரிட்டி சேவைகள் மற்றும் குளிர்சாதன ஸ்டோரேஜ் குடோன்கள் சேவையும் செயல்படுமாம். மற்ற நிறுவனங்கள் வேண்டுமானால் வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
போக்குவரத்து மற்றும் தொழில் துறை
அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தி ஆலைகள் இயங்கலாம். தொடர்ந்து இயங்கியே ஆக வேண்டிய தொழிற்சாலைகள் மாநில அரசின் அனுமதி உடன் இயங்கலாம். அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து வாகனங்கள், தீயணைப்பு, சட்ட ஒழுங்கு மற்றும அவசர சேவை வாகனங்கள் எல்லாம் இயங்கலாமாம்.
ஹோட்டல் துறை
சுற்றுலா பயணிகளாக வந்தவர்கள் அல்லது கொரோனா லாக் டவுனால் அதே இடங்களில் தங்க வேண்டிய கட்டாயத்தில் தங்கி இருப்பவர்கள் வசிக்கும் ஹோட்டல்கள், ஹோம் ஸ்டேக்கள், லாட்ஜ்கள், மோட்டல்கள் எல்லாம் செயல்படலாம். அதோடு கொரோனா இருப்பதாகச் சந்தேகித்து குவாரண்டைன் செய்ய பயன்படுத்திக் கொண்டு இருக்கும் கட்டடங்கள் செயல்படலாமாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications