SIP முதலீட்டாளர்களே உஷார்.. இப்போ நீங்க செய்ய வேண்டியது இது மட்டும் தான்..!!

தேர்தல் முடிவுகளை இந்திய பங்குச்சந்தையை புரட்டிப்போட்டு இருந்தாலும் ஜூன் 5 ஆம் தேதி வர்த்தகத்தில் சென்செக்ஸ் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2303.19 புள்ளிகள் உயர்ந்துள்ளது, நேற்றைய சரிவில் சுமார் 50 சதவீதம் இன்று மீண்டுள்ளது மும்பை பங்குச்சந்தை.

பங்குச்சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை என்றாலும், புதிய முதலீட்டாளர்களுக்கு அவை மிரட்டலாக இருக்கலாம். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பங்குச்சந்தையில் அறிமுகமாகி, SIP முறையில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ள இளைய தலைமுறைக்கு தேர்தல் காலங்களில் ஏற்படும் சந்தை வீழ்ச்சிகள் புதிய அனுபவமாக இருக்கும்.

 SIP முதலீட்டாளர்களே உஷார்.. இப்போ நீங்க செய்ய வேண்டியது இது மட்டும் தான்..!!

சமீபத்திய தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து சந்தையில் ஏற்பட்ட சரிவு அவர்களைக் கலங்கவைத்துள்ளது. ஆனால், நிபுணர்கள் இத்தகைய சந்தை சரிவுகளை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாகக் கருதுகின்றனர்.

மோடிலால் ஓஸ்வால் குழுமத்தின் ராமதேவ் அகர்வால் அவர்கள் SIP முதலீட்டாளர்களுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார். "தற்போதைய சந்தை சரிவு உங்கள் SIP தொகையை அதிகரிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமாகும்" என்று அவர் கூறியுள்ளார்.

பொதுவாக, SIP முதலீடுகளின் அடிப்படை நெறிமுறை, Cost Averaging ஆகும். அதாவது, நீண்ட காலத்திற்கு சீரான தவணைகளில் முதலீடு செய்வதன் மூலம், சந்தை உச்சத்தில் வாங்கும் அபாயத்தைக் குறைத்து, சராசரி விலையில் மியூச்சுவல் பண்ட் யூனிட்களை (Units) பெற முடியும்.

ஆனால், சந்தை ஏற்றம் உள்ள காலங்களில் மட்டுமே SIP களைத் தொடர்ந்து வந்தால், சந்தை உயர்ந்துகொண்டே இருக்கும் போது அதிக விலையில் யூனிட்களை வாங்க வேண்டியிருக்கும். இதனால், சராசரி விலை (Average Price) குறைவதை அடைய முடியாமல் போகலாம்.

தற்போது சந்தை சரிவில் இருப்பதால், கூடுதல் SIP தொகையை முதலீடு செய்வதன் மூலம் குறைந்த விலையில் யூனிட்களை வாங்க முடியும். இது நீண்ட காலத்திற்கு சிறந்த லாபத்தை அடைய உதவும்.

உதாரணமாக, 1000 ரூபாய் என்ற மாதாந்திர SIP தொகையை இரட்டிப்பாகக் கூட்டி 2000 ரூபாய் ஆக மாற்றுவதன் மூலம், குறைந்த விலையில் அதிக யூனிட்களைப் பெற முடியும். இதன் பலன், சந்தை மீண்டும் ஏறும்போது அதிக லாபம் கிடைக்கும்.

எனவே, SIP முதலீட்டாளர்கள் சந்தை சரிவைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மாறாக, இது தங்களது சராசரி விலையைக் குறைத்து, நீண்ட காலத்திற்கு அதிக லாபம் ஈட்டுவதற்கான சிறந்த வாய்ப்பாகக் கருத வேண்டும். தற்போதுள்ள SIP தொகையை அதிகரிப்பது அல்லது புதிய SIPகளைத் தொடங்குவது போன்ற முதலீட்டு பழக்கத்தை பின்பற்றலாம்.

பங்குச்சந்தை என்பது சுழற்சித்தன்மை கொண்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சந்தை எப்போதும் ஏற்றத்தில் இருக்காது, இறக்கமும் இருக்கும். ஆனால், நீண்ட கால SIP முதலீட்டின் மூலம், இந்த ஏற்ற இறக்கங்களைச் சமாளித்து கூடுதல் லாபம் பெறும் வாய்ப்பை கொடுக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+