ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. சுமார் 7.28 கோடி வருமான வரிக் கணக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த கோடிக்கணக்கான வரி தாக்கல் செய்பவர்களில், தவறான ITR படிவத்தைத் தேர்ந்தெடுத்து அல்லது அனைத்து வருமான ஆதாரங்களையும் வெளியிடாமல், ITR தாக்கல் செய்த வரி செலுத்துவோரைக் கண்டுபிடித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புகிறது.
அத்தகைய அறிவிப்புகளைப் பற்றி வரி செலுத்துவோருக்கு மெயில் மூலம் வருமான வரித் துறை தெரிவிக்கிறது. ஐடிஆர் தாக்கல் செய்யாதது, வரி செலுத்தாதது, வருமானத்தை வெளிப்படுத்தாதது போன்ற பல்வேறு சிக்கல்கள் காரணமாக அறிவிப்புகள் அனுப்பப்படலாம். பல்வேறு வருமான வரி அறிவிப்புகளின் விவரங்கள் மற்றும் அவற்றுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

நீங்கள் சம்பளம் வாங்கும் பணியாளராக இருந்து, நிறுவனம் உங்கள் சார்பாக வரியைக் கழித்துக் கொண்டு செலுத்தினால், நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்வது கட்டாயமாகும். புதிய வரி விதிப்பின் கீழ் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கும் குறைவாகவும், பழைய வரி முறையின் கீழ் ரூ. 2.5 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
உங்கள் நிறுவனம் உங்கள் சம்பளத்தில் இருந்து TDS பிடித்தம் செய்திருந்தால், உங்கள் சம்பளம் IT சட்டங்களின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை விலக்கு வரம்புகளை விட அதிகமாக உள்ளது என்று அர்த்தம். எனவே ஐடிஆர் தாக்கல் செய்யத் தவறினால் வருமான வரி அறிவிப்பு உங்களுக்கு அனுப்பப்படலாம்.
வருமான வரிச் சட்டம், 1961, பிரிவுகள் 139(9), 143(1), 143(2), 143(3), 245, 144, 147, மற்றும் 144, 147 உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் ITR தாக்கல் செய்யத் தவறிய நபர்கள் நோட்டீஸ்களைப் பெறலாம்.
வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்புவதற்கான பொதுவான காரணங்கள்.
TDS கழித்த பின்னரும் ITR தாக்கல் செய்யாதது: உங்கள் சம்பளத்தில் TDS பிடித்தம் செய்யப்பட்டிருந்தாலும், ITR தாக்கல் செய்ய வேண்டும். காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்தால், வருமான கணக்கீடு மற்றும் முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம். காலக்கெடு கடந்த பின், வருமான கணக்கீடு மற்றும் முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பித்து வரி ஏய்ப்பு இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.
மெயில் மூலம் ஐடிஆர் தாக்கல் செய்யாததற்கானஅறிவிப்பைப் பெற்றால், வருமான வரி இ-ஃபைலிங் இணையதளத்தில் உள்நுழைந்து ஆன்லைனில் பதிலளிக்கலாம். "Compliance section" என்ற பிரிவிற்குச் சென்று, உங்கள் அறிவிப்பைக் கண்டறிந்து, போர்ட்டலில் குறிப்பிடப்பட்டுள்ள தாக்கல் செய்யாததற்கான காரணங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் வரி தொகை மற்றும் ITR-இல் உள்ள படிவம் 26AS ஆகியவவை பொருந்தவில்லை என்றால், நீங்கள் IT அறிவிப்பைப் பெறுவீர்கள். படிவம் 26AS இல் உள்ள வரிக் கிரெடிட்களை TDS மற்றும் ITR இல் சரிபார்த்து, ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் சரி செய்யவும். அதற்கேற்ப உங்கள் வருமான வரி விவரங்களைப் புதுப்பித்து, திருத்தப்பட்ட ITR-ஐ தாக்கல் செய்யவும்.
உங்கள் வருமானம் அனைத்தையும் வெளியிடாததற்காக நீங்கள் அறிவிப்பைப் பெறலாம். வங்கி வட்டி, வரி விலக்குகள் மற்றும் வருடாந்திர தகவல் அறிக்கைகள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து வரித் துறை இந்தத் தகவலைக் கண்டறியலாம். பல்வேறு ஆதாரங்களில் இருந்து உங்கள் வருமானத்தைச் சரிபார்த்து, படிவம் 26AS உடன் ஒப்பிடவும். நீங்கள் ஏதேனும் வருமான விவரங்களை தவறவிட்டால், உங்கள் ITR-ஐப் புதுப்பித்து, தாக்கல் செய்யவும்.
வரி செலுத்துபவர்கள், வருமான வரித் துறையிடமிருந்து வருமான வரி அறிவிப்பைப் பெற்ற பிறகு என்ன செய்ய வேண்டும்?:
வருமான வரி அறிவிப்பைப் பெற்ற பிறகு நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், அதை கவனமாகப் படித்து புரிந்துகொள்வது. வருமான வரிச் சட்டம், 1961 இன் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வருமான வரித் துறை வரி செலுத்துவோருக்கு அறிவிப்புகளை வழங்குகிறது. ஒவ்வொரு வகையான அறிவிப்பும் வெவ்வேறு நோக்கத்திற்காக அனுப்பப்படுகிறது.
1. நோட்டீஸில் உள்ள பெயர், PAN எண், மதிப்பீட்டு ஆண்டு ஆகியவற்றை சரிபார்க்கவும்.
2. நோட்டீஸ் உங்களுக்கு தொடர்புடையதா என்பதை உறுதிப்படுத்தவும்.
3. வருமான வரி இணையதளத்தில் நோட்டீஸை சரிபார்க்கவும்.
4. நோட்டீஸில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications