சென்னை: நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக உள்ளன. உங்களின் அனைத்து பரிவர்த்தனைக்கும் தேவைப்படும், இது போன்ற அரசாங்க ஆவணங்களைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இந்நிலையில் ஒருவர் இறந்து விட்டால் அவருடைய அதிகாரப்பூர்வ அரசாங்க ஆவணங்களை என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆதார் கார்டு: ஆதார் முக்கியமான முகவரிக்கான சான்றாக செயல்படுகிறது. அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கார்டு அத்தியாவசிய ஒன்றாக உள்ளது. எல்பிஜி மானியம், அரசாங்க உதவித்தொகை, EPF கணக்குகள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் நம்பர் கட்டாயமாகும். ஒருவர் இறந்து இறப்புச் சான்றிதழைப் பெற்றால் ஆதார் தானாகவே செயலிழந்து விடும் என்று சிலர் கருதுகின்றனர்.

ஆனால் அவ்வாறு இல்லை. ஆதாரை இறப்பு தேதியை வைத்து புதுப்பிக்க முடியாது. இதுபோன்ற இறந்தவர்களின் ஆதார் அட்டைகளை பயோமெட்ரிக் லாக் செய்வதன் மூலம் பாதுகாக்கலாம். இதனால் இறந்தவரின் ஆதாரத்தை தவறாக மற்றவர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும். UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்வதால் இறந்தவரின் ஆதாரை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது.
பான் கார்டு: பேங்க் அக்கவுண்ட், டிமேட் அக்கவுண்ட், ITR தாக்கல் செய்வது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு பான் கார்டு அவசியமாகிறது. இந்நிலையில் வருமானவரித்துறையினரிடம் இருந்து இறந்தவருக்கு ஏதேனும் ரீஃபண்ட் வர இருந்தால் நீங்கள் அவருடைய வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு விவரங்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இது போன்ற எல்லா விஷயங்களும் முடிவடைந்த பின்னர் பான் கார்டை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கலாம்.
இறந்தவரின் பான் கார்டு ஒப்படைக்க என்ன செய்ய வேண்டும்?: இறந்தவரின் வாரிசு அல்லது குடும்ப உறுப்பினர் மதிப்பீட்டு அதிகாரிக்கு (AO) ஒரு விண்ணப்பத்தை எழுத வேண்டும். அதில் என்ன காரணத்தினால் பான் கார்டு வைத்திருப்பவர் இறந்தார், அவருடைய பெயர், பான் விவரங்கள், பிறந்த தேதி போன்றவற்றை குறிப்பிட்டு இறப்புச் சான்றிதழ் ஜெராக்ஸ் காப்பியை கடிதத்தில் வைத்து சமர்ப்பிக்க வேண்டும். இறந்தவரின் பான் விவரங்களை ஒப்படைப்பது என்பது கட்டாயம் இல்லை. இருந்தாலும் தேவைப்பட்டால் நீங்கள் அதனை ஒப்படைக்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டை: வாக்காளர் அட்டையை பொருத்தவரை, வாக்காளர் விதிகள் 1960-இன் கீழ் இறந்தவருடைய வாக்காளர் அட்டையை ரத்து செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு இறந்தவரின் சட்டபூர்வ வாரிசு உள்ளாட்சி தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று படிவம் எண் 7 -ஐ பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதளை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
பாஸ்போர்ட்: இறந்தவரின் பாஸ்போர்ட் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தானாகவே காலாவதியாகிவிடும்.
இதுபோன்ற இறந்தவர்களின் ஆவணங்களை சட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் படாவிட்டால் எந்த அபராதமும் இல்லை. இருப்பினும், இது போன்ற ஆவணங்களை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பது அல்லது டி-ஆக்டிவேட் செய்வது, ஆன்லைனில் மோசடிகள் நடப்பதைத் தவிர்க்க உதவும். ஒரு வேலை, உங்களால் அவற்றை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடியவில்லை என்றாலும், நீங்களே இறந்தவர்களின் ஆவணங்களை பத்திரமாக வைத்திருக்கலாம்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications