இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் குறுஞ்செய்தி பகிரும் செயலியான வாட்ஸ்அப், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மோடி அரசின் புதிய மீடியா கொள்கையில் இந்திய சட்டத்திற்கு எதிராக உள்ளது என வழக்குத் தொடுத்துள்ளதாக ரெயூட்டர் தெரிவித்துள்ளது.
மோடி அரசு வெளியிட்டுள்ள புதிய மீடியா கொள்கை இந்திய சட்டத்தில் இருக்கும் தனியுரிமை உரிமைகளுக்கு எதிராக உள்ளது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்கில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளதாக ரெயூட்டர்ஸ்-க்கு தகவல் கிடைத்துள்ளது.
புதிய மீடியா கொள்கை
இப்புதிய மீடியா கொள்கையில் அரசு துறைகளின் கோரிக்கை படி ஒரு பதிவை யார் முதலில் செய்தார்கள் ("first originator of information") என்பதைச் சமுக வலைத்தள நிறுவனங்கள் கண்டறிந்து அரசுக்குத் தகவல் அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் தளம்
புதிய மீடியா கொள்கையில் தவறு செய்தவர்களை மட்டுமே அடையாளம் காண வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அனுமதித்தாலும், இதை ஒரு பதிவுக்கு மட்டும் செய்ய முடியாது. காரணம் வாட்ஸ்அப் தளத்தில் அனைத்துப் பதிவுகள், குறுஞ்செய்திகளும் end-to-end encryption செய்யப்பட்டு உள்ளது.
தனியுரிமை பாதுகாப்பு விதிகள்
தற்போது புதிய மீடியா கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் குறுஞ்செய்தியை முதலில் அனுப்பியவருக்கு மட்டும் அல்லாமல், குறுஞ்செய்தியைப் பெற்றவர்களுக்கும் end-to-end encryption முறையை உடைக்க வேண்டும் என வாட்ஸ்அப் தனது வழக்கில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் தனியுரிமை பாதுகாப்பு விதிகள் உடைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் விளக்கம்
மேலும் ரெயூட்டர்ஸ் இந்த வழக்கின் புகார் அறிக்கையை நேரில் பார்க்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இந்தச் செய்தியை யாரும் உறுதி செய்ய மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளரும் இதுகுறித்து எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
மோடி அரசு
புதிய மீடியா கொள்கையை அமல்படுத்துவதில் பல பிரச்சனைகள் உருவான வேளையில், இந்த வழக்கு மோடி தலைமையிலான அரசுக்கும், சமூக வலைதள நிறுவனம் மற்றும் டெக் நிறுவனங்களான பேஸ்புக், கூகுள், டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் மத்தியிலான பிரச்சனையைப் பெரிதாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
டிவிட்டர் அலுவலகத்தில் போலீஸ்
சமீபத்தில் டிவிட்டர் சில முக்கியத் தலைவர்களின் டிவீட்டுக்கு "manipulated media" என லேபிள் செய்த நிலையில் காவல் அதிகாரிகள் டிவிட்டர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்ற காரணத்தால் சமுக வலைத்தள நிறுவனங்கள் மத்தியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
பேஸ்புக் கட்டுப்பாட்டில் வாட்ஸ்அப்
மேலும் இந்த வழக்கின் மூலம் புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் புதிய மீடியா கொள்கைகளைத் தடுக்க முடியும், வாட்ஸ்அப் நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த விதிகள் மூலம் பேஸ்புக் தனது தனியுரிமை பாதுகாப்பு விதிகள் உடைக்கப்படுகிறது எனக் கருதுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications