மோடி அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்த வாட்ஸ்அப்.. புதிய மீடியா கொள்கையில் பிரச்சனை..!

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் குறுஞ்செய்தி பகிரும் செயலியான வாட்ஸ்அப், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மோடி அரசின் புதிய மீடியா கொள்கையில் இந்திய சட்டத்திற்கு எதிராக உள்ளது என வழக்குத் தொடுத்துள்ளதாக ரெயூட்டர் தெரிவித்துள்ளது.

மோடி அரசு வெளியிட்டுள்ள புதிய மீடியா கொள்கை இந்திய சட்டத்தில் இருக்கும் தனியுரிமை உரிமைகளுக்கு எதிராக உள்ளது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்கில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளதாக ரெயூட்டர்ஸ்-க்கு தகவல் கிடைத்துள்ளது.

புதிய மீடியா கொள்கை

புதிய மீடியா கொள்கை

இப்புதிய மீடியா கொள்கையில் அரசு துறைகளின் கோரிக்கை படி ஒரு பதிவை யார் முதலில் செய்தார்கள் ("first originator of information") என்பதைச் சமுக வலைத்தள நிறுவனங்கள் கண்டறிந்து அரசுக்குத் தகவல் அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் தளம்

வாட்ஸ்அப் தளம்

புதிய மீடியா கொள்கையில் தவறு செய்தவர்களை மட்டுமே அடையாளம் காண வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அனுமதித்தாலும், இதை ஒரு பதிவுக்கு மட்டும் செய்ய முடியாது. காரணம் வாட்ஸ்அப் தளத்தில் அனைத்துப் பதிவுகள், குறுஞ்செய்திகளும் end-to-end encryption செய்யப்பட்டு உள்ளது.

தனியுரிமை பாதுகாப்பு விதிகள்

தனியுரிமை பாதுகாப்பு விதிகள்

தற்போது புதிய மீடியா கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் குறுஞ்செய்தியை முதலில் அனுப்பியவருக்கு மட்டும் அல்லாமல், குறுஞ்செய்தியைப் பெற்றவர்களுக்கும் end-to-end encryption முறையை உடைக்க வேண்டும் என வாட்ஸ்அப் தனது வழக்கில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் தனியுரிமை பாதுகாப்பு விதிகள் உடைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் விளக்கம்

வாட்ஸ்அப் விளக்கம்

மேலும் ரெயூட்டர்ஸ் இந்த வழக்கின் புகார் அறிக்கையை நேரில் பார்க்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இந்தச் செய்தியை யாரும் உறுதி செய்ய மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளரும் இதுகுறித்து எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.

மோடி அரசு

மோடி அரசு

புதிய மீடியா கொள்கையை அமல்படுத்துவதில் பல பிரச்சனைகள் உருவான வேளையில், இந்த வழக்கு மோடி தலைமையிலான அரசுக்கும், சமூக வலைதள நிறுவனம் மற்றும் டெக் நிறுவனங்களான பேஸ்புக், கூகுள், டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் மத்தியிலான பிரச்சனையைப் பெரிதாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

டிவிட்டர் அலுவலகத்தில் போலீஸ்

டிவிட்டர் அலுவலகத்தில் போலீஸ்

சமீபத்தில் டிவிட்டர் சில முக்கியத் தலைவர்களின் டிவீட்டுக்கு "manipulated media" என லேபிள் செய்த நிலையில் காவல் அதிகாரிகள் டிவிட்டர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்ற காரணத்தால் சமுக வலைத்தள நிறுவனங்கள் மத்தியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

பேஸ்புக் கட்டுப்பாட்டில் வாட்ஸ்அப்

பேஸ்புக் கட்டுப்பாட்டில் வாட்ஸ்அப்

மேலும் இந்த வழக்கின் மூலம் புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் புதிய மீடியா கொள்கைகளைத் தடுக்க முடியும், வாட்ஸ்அப் நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த விதிகள் மூலம் பேஸ்புக் தனது தனியுரிமை பாதுகாப்பு விதிகள் உடைக்கப்படுகிறது எனக் கருதுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+