சென்னை: மத்திய அரசு எங்களைக் கட்டாயப்படுத்தினால், நாங்கள் கண்டிப்பாக இந்தியாவை விட்டு வெளியேறுவோம் என்று வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியை உலகெங்கும் வசிக்கும் 330 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 40 கோடி வாட்ஸ்அப் பயனாளர்கள் உள்ளனர்.

உச்ச நீதிமன்றம் மற்றும் பல தனியார் நிறுவனங்களும் வாட்ஸ்அப்-ஐ அதிகாரப்பூர்வ செயலியாக பயன்படுத்தி வருகின்றனர். நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் சக ஊழியர்களிடம் தகவல்களைத் தெரிவிக்க வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் மத்திய அரசு, சிலர் போலியான தகவல்களை வாட்ஸ்அப்பில் ஷேர் செய்வதால், அவர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு வாட்ஸ்அப் நிறுவனத்திடம், முதலில் இந்த போலியான செய்திகளை பகிர்ந்த நபர்களின் டேட்டாக்களை கேட்டது.
இந்த நிலையில் மத்திய அரசு கேட்கும்போது வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வைரலாகும் தகவல்களை முதல் முதலில் அனுப்பியவர் பற்றிய விவரங்களை கண்டறிந்து அழிக்க வேண்டும் என்று இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021ல் மாற்றம் செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து, விவரங்களை பகிர முடியாது எனக் கூறி வாட்ஸ்அப் மற்றும் மெட்டா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்றது. அப்போது வாட்ஸப்பில் அனுப்பப்படும் அனைத்துத் தகவல்களும் என்கிரிப்சன் முறையில் பாதுகாப்பாக அனுப்பப்படுகிறது. இதனை பயன்படுத்தும் 40 கோடி இந்தியர்கள், அதனை நம்பிக்கையுடன் பயன்படுத்தி வருகின்றனர் என்று மெட்டா நிறுவன வழக்கறிஞர் தெரிவித்தார்.
வாட்ஸ்அப் தகவல்கள் மற்றும் பயனாளர்களின் விவரங்களை வெளியிடக் கூறுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் 14, 19 மற்றும் 21 ஆகிய பிரிவுகளுக்கு முரணானது என்று மெட்டா நிறுவன வழக்கறிஞர் வாதித்தார். அரசின் இந்த நடவடிக்கை அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும், இந்த விதிமுறை முழுமையாக செயல்படுத்தப்பட்டால், பிறகு இந்தியாவை விட்டு வாட்ஸ்அப் நிறுவனம் வெளியேற வேண்டி இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் மெட்டா தரப்பு வழக்கறிஞர், உலகில் வேறு எந்த ஒரு நாட்டிலும் இத்தகைய விதிமுறைகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் மத்திய அரசு எந்த சமயத்தில் எந்த வாட்ஸ்அப் தகவலை கேட்கும் என்று யாருக்கும் தெரியாத நிலையில், பல நூறு கோடி வாட்ஸ் அப் தகவல்களை பல ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மெட்டா தரப்பு வாதங்களை, கேட்டு அறிந்த நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை பொருத்தே வாட்ஸ்அப் செயலி இந்தியாவில் தொடர்ந்து நடைமுறையில் இருக்குமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications