சென்னை: இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா , கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் முதலீடுகளை ஈர்ப்பதிலும் தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
இதில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு இடையே 1 டிரில்லியன் ஜிடிபி என்ற இலக்கை எட்டுவதற்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பாக செபியில் பதிவு செய்யப்பட்ட நிதி திட்டமிடல் நிபுணரான டி.முத்துகிருஷ்ணன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான பதிவினை வெளியிட்டுள்ளார். கிராக் ஏஐ செயலியிடம் கேட்டு அது அளித்த தகவலை அவர் பதிவு செய்துள்ளார்.

அதன்படி மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் எந்த மாநிலம் கூடிய விரைவில் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற நிலையை எட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் என்ற நிலையை எட்டுவதற்கு மகாராஷ்டிரா பொருளாதாரம் ஆண்டுக்கு 18.6 சதவீதம் என்ற வளர்ச்சியை அடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் ஜிடிபியை எட்ட ஆண்டுக்கு 16 சதவீத வளர்ச்சியை அடைய வேண்டி இருக்கும் என தெரித்துள்ளார். தமிழ்நாடு அரசு தீவிரமான கொள்கைகளைக் கொண்டு வந்து தற்போது இருக்கும் சில இடைவெளிகளை பூர்த்தி செய்தாலே 1 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதாரத்தை எட்டி விட முடியும் என கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இந்த போட்டியில் முன்னிலையில் இருப்பது மகாராஷ்டிரா தான் என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவை பொருத்தவரை 2030ல் இருந்து 2032க்குள் தன் இலக்கை எட்டும் என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2032 முதல் 2034ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான பொருளாதார சூழல், அந்தந்த மாநிலத்தில் எப்படி அரசின் கொள்கைகள் செயல்படுத்தப்படுகின்றன, முதலீடுகள் எவ்வாறு ஈர்க்கப்படுகின்றன, இவற்றையெல்லாம் பொறுத்து இந்த காலம் மாறும் என்றும் அவர் தெரிவிக்கிறார். இந்தியாவில் தற்போதைக்கு மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களும் தான் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார போட்டியில் முன்னிலையில் இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடலோரம் இருப்பதால் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் என ஏற்றுமதி இறக்குமதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் மகாராஷ்டிராவிலும் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. எனவே தான் இந்த இரண்டு மாநிலங்களிலும் வாகன உற்பத்தி மற்றும் செல்போன் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. எலான் மஸ்கின் டெஸ்லா மின்சார வாகன உற்பத்தி ஆலையை தங்கள் மாநிலத்திற்கு கொண்டுவர வேண்டுமென இரண்டு மாநிலங்களும் கடுமையாக போட்டி போடுகின்றன.
தற்போதைக்கு தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் பார்க்கும்போது மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் இருக்கிறது, தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதாரமாக திகழ்கிறது.
More From GoodReturns

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications