தமிழ்நாட்டு முதல்வர் முக ஸ்டாலின் தனது அமெரிக்கப் பயணத்தில் JABIL நிறுவனத்துடனான 2000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தம், திருச்சியின் அடையாளத்தையே மாற்றப்போகிறது என்று பேசப்பட்டு வரும் வேளையில், இந்த தொழிற்சாலை எந்த இடத்தில் அமைக்கப்படப்போகிறது என்பது முக்கியமான கேள்வியாக தற்போது உள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான ஜாபில் இன்க், திருச்சியில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டது, இந்த தொழிற்சாலை திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள மணப்பறை சிப்காட்-ல் விரைவில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைக்கப்படுவதாகத் தெரிகிறது.

தமிழ்நாடு அரசு சிப்காட் தொழிற்பூங்காவில் ஜாபில் இன்க் நிறுவனத்திற்குத் தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்ய தயாராக இருக்கும் வேளையில் உள்ளது. ஆப்பிள், சிஸ்கோ, HP மற்றும் டெல் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் உதிரிப்பாகங்களை வழங்கும் இந்த ஜாபில் நிறுவனம், திருச்சியில் சுமார் ரூ.2000 கோடி முதலீட்டில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க சுமார் 70 ஏக்கர் நிலம் தேடுகிறது.
அமெரிக்க நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டால், மணப்பறையில் உள்ள சிப்காட் தொழில்துறை பூங்காவில் முதல் பன்னாட்டு மற்றும் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமாக இது இருக்கும். இந்த முதலீட்டின் வாயிலாக இப்பகுதியில் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் தொழில்துறை பூங்கா அமைக்க 2013 இல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட உத்தரவின் பெயரில் உருவானது. இந்த தொழிற்பூங்காவிற்கான நிலத்தை மலிவான விலையில் நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான நோக்கத்துடன் இந்த சிப்காட் உருவானது.
நிலம் கையகப்படுத்தும் நீண்ட செயல்முறையின் பின்னர், மணப்பறை சிப்காட் உருவாக்க கண்ணுடையன்பட்டி, கே. பெரியப்பட்டி மற்றும் சத்திரப்பட்டி கிராமத்தில் இருந்து சுமார் 1,096.36 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி சிப்காட் தொழில்துறை பூங்கா உருவாக்கப்பட்டது.
பின்னர் இது தொழில்துறை அமைக்கும் நிறுவனங்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் சாலை, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அனைத்து தேவையான வசதிகளையும் உருவாக்கியது. மணப்பாறை சிப்காட்டில் 2019 முதல் நிலம் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கியது.
இந்த 1,096 ஏக்கரில், தமிழ்நாடு அரசின் சிறு தொழில்துறை வளர்ச்சி கழகத்திற்கு (SIDCO) 131.92 ஏக்கர் ஒதுக்கப்பட்டு உள்ளது. மணப்பறையின் சிப்காட் இதுவரை 13 நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு வழங்கியுள்ளது. அவற்றில் ஐந்து நிறுவனங்கள் உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன மற்றும் எட்டு பொது பொறியியலில் ஈடுபட்டுள்ளன. இதுவரை சுமார் 80 ஏக்கர் 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications