நம்மில் மாதச் சம்பளம் வாங்கும் பலரும், ஒவ்வொரு மாதமும் கையில் பணம் கிடைத்தவுடன் வீட்டு வாடகைக்கு, மளிகைப் பொருள்களுக்கு, வாங்கிய கடனுக்கு என எது எதற்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமோ, அதை மறக்காமல் கொடுத்துவிடுவோம். அந்தச் சம்பளத்தின் மூலம் வருமான வரியிலிருந்து கிடைக்கும் சலுகைகளால் நாம் சரியான முறையில் பயனடைகிறோமோ என்றால், இல்லை' என்றுதான் கூற வேண்டும். 10,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை என யார் எவ்வளவு சம்பாதித்தாலும், அனைவருமே கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்கின்றனர். என்னதான் சம்பாதித்தாலும் ஆண்டு இறுதியில் நம்மில் பலரையும் மிரட்டுகிறது வருமானவரி.
இந்தநிலையில் தற்போது, ஆண்டு வரும் 12 லட்சம் வரை ஊதியம் பெறுபவர்களுக்கு வருமான வரி இல்லை என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வீடு வாங்குவது அல்லது வாடகைக்கு எடுப்பது எது சிறந்தது என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இருப்பினும், வருமானவரி என்றாலே ஒருசிலர், அலறி ஓடுகின்றனர்; என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கின்றனர். ஆனால், அரசுக்கு நாம் செலுத்தவேண்டிய வரிப்பணத்தைச் சேமிக்க பல வழிகள் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை.

சொத்து வாங்குவது பெரும்பாலும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீடாகக் கருதப்படுகிறது. இருப்பினும், வரி அடிப்படையில் ஒரு சொத்தை வாடகைக்கு எடுப்பதன் முக்கிய நன்மை, வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) விலக்கு ஆகும். அதாவது, வீட்டு வாடகை கொடுப்பனவு என்பது ஒரு நிறுவனம் , வாடகை வீட்டில் வசிக்கும் தனது ஊழியருக்கு ஊதியத்துடன் வழங்கும் ஒரு குறிப்பட்ட தொகையாகும். இந்த தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் மூலம், ஊழியர் முழுமையாகவோ அல்லது பாதியாகவோ விலக்கு பெறலாம். எனினும், வாடகை வீட்டில் வசித்துவந்தால் மட்டுமே ஊழியரால் வீட்டு வாடகை கொடுப்பனவின் கீழ் விலக்கு பெற முடியும். வரி விலக்கு பெற, வீட்டு வாடகை ரசிது போன்ற தகுந்த ஆவணங்களை ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
அதாவது, சுயதொழில் செய்பவர்கள் அல்லது ஆலோசகர்கள் போன்ற சம்பளத்தில் (வீட்டு வாடகை கொடுப்பனவு)HRA சேர்க்கப்படாதவர்களுக்கு, பாரம்பரிய வரி முறையின் கீழ் அவர்களின் மொத்த வரி விதிக்கக்கூடிய வருமானத்திலிருந்து மாதத்திற்கு ரூ. 5,000 வரை கழிக்கக் கோரும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், புதிய வரி முறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு இந்த விலக்கு பொருந்தாது.
வீட்டு வாடகை கொடுப்பனவை கணிக்கிட கீழ்காணும் காரணிகள் அவசியம்: மொத்த ஊதியம், ஊதியத்தில் வீட்டு வாடகை கொடுப்பனவின் விகிதம், வீட்டு வாடகை, வாடகைக்கு வசித்துவரும் வீடு அமைந்துள்ள நகரம். அதாவது, இந்த மூன்று விதிகளின் அடிப்படையில் வீட்டு வாடகை கொடுப்பனவு கணக்கிடப்படுகிறது. இதில், மிக குறைவானது எதுவோ, அது வரிகுறைப்புக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
நிறுவனத்திடம் இருந்து ஊழியருக்கு வழங்கப்படும் வீட்டு வாடகை கொடுப்பனவு தொகை, வீட்டு வாடகைக்கு செலுத்தும் தொகையில் இருந்து 10 சதவீத அடிப்படை ஊதியத்தை கழித்த பின் கிடைக்கும் தொகை,தொழிலாளி டெல்லி, மும்பை, கொல்கத்தா அல்லது சென்னையில் வசித்தால் அவரது ஊதியத்தில் 50 சதவீதமும் பிற நகரங்களில் வசித்தால் அவரது ஊதியத்தில் 40 சதவீதமும் கணக்கிடப்படும். மேலும் இதன் மூலம் வீட்டுக் கடன் EMI-ஐ விட வாடகை குறைவாக இருக்கும். நகரத்தின் வேறொரு பகுதிக்கு எளிதாக இடம்பெயரலாம்.வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
சொத்துகளை வாங்குதல்: வரிச் சலுகைகள் பாரம்பரிய வரி கட்டமைப்பின் கீழ் மட்டுமே கிடைக்கும். நீங்கள் வீடு வாங்க அடமானம் எடுக்கும்போது, மாதாந்திர கட்டணம் (EMI) பொதுவாக இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது. ஒரு பகுதி அசலை (பெறப்பட்ட கடன் தொகை) திருப்பிச் செலுத்துவதற்கும் மற்றொன்று வட்டியை (கடன் வாங்குவதற்கான செலவு) ஈடுகட்டுவதும் ஆகும்.
அசல் திருப்பிச் செலுத்துதல்: வரி முறையின் அடிப்படையில், பிரிவு 80C இன் கீழ் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை விலக்கு கிடைக்கிறது. இந்த வரம்பிற்குள், அசல் திருப்பிச் செலுத்துதல், முத்திரை வரி, பதிவு கட்டணம் மற்றும் சொத்து பரிமாற்றம் தொடர்பான பிற செலவுகளுக்கு விலக்கு அளிக்கப்படலாம்.
வட்டி செலுத்துதல்: மூன்று நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்: வீடு வசிக்கும் இடம், குடியிருப்பின்றி அல்லது வாடகைக்கு விடப்பட்ட இடம். பாரம்பரிய வரி கட்டமைப்பின்படி, வீட்டுக் கடனுக்கு செலுத்தப்படும் வட்டியில் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை விலக்கு உரிமையாளரால் வசிக்கும் சொத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. இது வருமானத்தையும் ஈடுசெய்யும். வீட்டில் வசிக்காமல் இருந்தாலும் அதே விதிமுறைகள் பொருந்தும். வாடகைக்கு எடுக்கப்பட்ட சொத்துக்களுக்கு, அடமானத்தின் வட்டிக்கு மட்டுமல்ல, நகராட்சி வரிகள் செலுத்தப்பட்டதற்கும், வாடகை வருமானத்தில் 30% நிலையான விலக்குக்கும் விலக்கு கோரலாம்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications