2022-ம் ஆண்டு அரையாண்டு முடிவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலம் என்ற பெருமையை ஆந்திர பிரதேசம் பெற்றுள்ளது.
ஆந்திர பிரதேசம் மட்டும் மொத்தமாக 40,361 கோடி ரூபாய் முதலீட்டை இந்த ஆண்டின் அரையாண்டு இறுதிக்குள் பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு மொத்தமாக 1,71,285 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது.
ஆந்திர பிரதேசம் & ஓடிசா
ஆந்திர பிரதேசம் மற்றும் ஓடிசா மாநிலங்கள் மட்டும் மொத்தமாக 45 சதவீதம் முதலீட்டை ஈர்த்து ஆச்சரியப்படுத்தியுள்ளன. ஓடிசா மாந்ல 36,828 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது. ஆனால் அதில் 20,949 கோடி ரூபாய் மட்டும் தற்போது வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா & குஜராத்
இந்த பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ள மகாராஷ்டிரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. குஜராத் மாநிலம் 17,620 கோடி ரூபாயுடன் 4வது இடத்தில் உள்ளது. இங்கு பட்டியலிடப்பட்ட தொகை தான் உண்மையாக வந்தடைந்துள்ள முதலீடுகள்.
தமிழ்நாடு
ஜூலை மாதம் வரையில் தமிழ்நாடு 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்களை பல்வேறு நிறுவனங்களுடன் போட்டுள்ளது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை இன்னும் முழுமையாக வந்தடையவில்லை என்பதையே இந்த தரவுகள் கட்டுகின்றன. சில வாரங்களுக்கு முன்பு கூட தமிழ்நாடு அரசு தோல் துறையில் மட்டும் 2,250 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது.
தென் கொரியா பயணம்
தமிழ்நாட்டுக்கு தொழிற்துறைக்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடங்கிய உயர் மட்டக் குழுவினர் ஐந்து நாள் பயணமாக விரைவில் தென் கொரியா செல்ல உள்ளனர். ஆனால் இது என்ன மாதிரியான முதலீடுகள் எந்த நிறுவனங்கள் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
ஏன் ஒரு மாநிலத்துக்கு முதலீடுகள் முக்கியம்
ஒரு மாநிலத்தில் அதிகப்படியாக தொழில் தொடங்க முதலீடுகள் கிடைத்தால் தான் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். அந்த மாநிலத்தின் பொருளாதாரம் மேம்படும்.
ஜிடிபி
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜிடிபி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு. மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 8.4 விழுக்காடு. ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு. கார்கள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு. தொல்பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு. இரண்டு நாட்களாக முன் வெளிவந்த மத்திய அரசு அறிவிப்பில், இந்தியாவின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் பெரும்பாலானவை தமிழகத்தில்தான் இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

2ஆவது குழந்தை பெற்று கொண்டால் ரூ.25,000 நிதியுதவி, இலவச கல்வி!! அரசின் அதிரடி அறிவிப்பு!!



Click it and Unblock the Notifications