அமெரிக்காவின் அரசு நிர்வாகத்தை சீர்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள அரசு செயல் திறன் துறையில் (DOGE) இந்தியா வம்சாவளியான 22 வயது பொறியாளர் ஒருவர் முக்கிய பொறுப்பில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதை அடுத்து அரசு நிர்வாகத்தை சீர்ப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அரசு செயல் திறன் துறை (DOGE) என்ற ஒரு புதிய துறையை உருவாக்கியுள்ளது.

இந்த துறைக்கு எலான் மஸ்க் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த அரசு செயல் திறன் துறை, அரசு பணியாளர்களை ஒழுங்கு படுத்துவது, அரசு பணிகளை இன்னும் செயல்திறன் கொண்டதாக மாற்றுவது என்பன உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.
இந்த துறையில் இந்திய வம்சாவளி பொறியாளர் ஒருவரை பணிக்கு அமர்த்தி உள்ளார் எலான் மஸ்க். 22 வயதான ஆகாஷ் பொப்பா, எலான் மஸ்கால் நேரடியாக அரசாங்க செயல் திறன் துறையில் முக்கிய பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆகாஷ் பொப்பாவை தவிர்த்து 19 முதல் 24 வயதுக்கு உட்பட்ட மேலும் ஐந்து பேர் அரசு செயல் திறன் துறையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் எட்வர்ட் கோரிஸ்டின், லூக் ஃபாரிட்டர், கௌடியர் கோல் கிலியன், கேவின் கிளிகர் மற்றும் ஈதன் ஹாவோட்ரன் ஆவர்.
புதிதாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள 6 இளம் பொறியாளர்களில் சிலர் இன்னும் கல்லூரி படிப்பை கூட முடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அரசு பணியாளர்கள் மேலாண்மை , பொது சேவை மேலாண்மை ஆகிய துறைகளில் இவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அரசின் ரகசிய தகவல்களை கையாளப் போகின்றனர்.
ஆகாஷ் பொப்பா பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இவர் எதிர்கால தொழில்நுட்பத் துறை தலைவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட மேலாண்மை தொழில் முனைவர் மற்றும் தொழில்நுட்ப பாடத்தை படித்துள்ளார். இவர் மெடா, பலண்டீர், பிரிட்ஜ் வாட்டர் அசோசியேட்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணி செய்த அனுபவம் கொண்டவர்.
செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனலிட்டிக்ஸ், பைனான்சியல் மாடலிங் ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கிறார் ஆகாஷ் பொப்பா. முன்னதாக இவருடைய நண்பர் ஒருவர் லிங்குடின் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், இவர்கள் இருவரும் இணைந்து ஒரு பிராஜெக்ட் செய்ததாகவும் அப்போது எதிர்பாரா விதமாக கோடிங் முழுவதும் அழிந்துவிட்டதாகவும் கூறியுள்ளார், பிராஜெக்ட் சமர்ப்பிக்க இரண்டு நாட்களே இருந்த நிலையில் ஆகாஷ் பொப்பா மீண்டும் கோடிங்கை எழுதினார், கோடிங்கில் இவரை அசைக்க ஆள் இல்லை என கூறியுள்ளார்.
இதனிடையே ஆகாஷ் பொப்பா உள்ளிட்ட 6 இளம் பொறியாளர்களும் 24 வயதுக்கு உட்பட்டவர்கள், இவர்களால் அரசின் ரகசியமான தகவல்களை எப்படி கையாள முடியும், விதிகளை மீறி எலான் மஸ்க் இவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன்.
Story written by: Devika
More From GoodReturns

டிரம்புடன் கைகோர்த்த அம்பானி!! ஈரான் போருக்கு மத்தியில் அமைந்த சர்ப்பிரைஸ் கூட்டணி!!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications