சனிக்கிழமை, அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான சேபியின் தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர், கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியிடமிருந்து பெரும் முதலீடுகளைப் பெற்ற ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் பங்குகளை வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
அதானி குழுமத்தின் பங்குகளை முறைகேடாக உயர்த்தியதில் முக்கிய பங்கு வகித்த கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானிக்கு சொந்தமான மொரிஷியஸ் நிறுவனத்தில் செபி தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவருக்கும் பங்கு உள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மாதவி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் இருவரும் கடுமையாக மறுத்துள்ளனர்.

ஹிண்டன்பர்க் அறிக்கையின்படி, மாதபி புரி புச் சேபி தலைவராக நியமிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அதாவது 2017-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி அன்று, அவரது கணவர் மொரிஷியஸ் நிதி நிர்வாக நிறுவனமான ட்ரைடன் டிரஸ்ட்டை தொடர்பு கொண்டு, தங்களின் முதலீடு குறித்து கேட்டறிந்தார். இந்த முதலீடு குளோபல் டைனமிக் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் (GDOF) என்ற ஃபண்டில் முதலீடு செய்வதற்காக என்றும் கூறப்படுகிறது.
தவால் புச் யார்?: தவால் புச் தற்போது பிளாக்ஸ்டோன் மற்றும் அல்வாரெஸ் & மார்சல் நிறுவனங்களில் மூத்த ஆலோசகராக உள்ளார். மேலும் கில்டன் வாரியத்தில் இயக்குனராகவும் பணியாற்றுகிறார். அவர் டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT-D) முன்னாள் மாணவர் ஆவார். இவர் 1984-ஆம் ஆண்டில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றார்.
முன்னதாக, அவர் யூனிலீவரில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார் மற்றும் அதன் முதன்மை கொள்முதல் அதிகாரியாக இருந்தார் என்ற விவரங்கள் அவரது LinkedIn பயோடேட்டா மூலம் தெரிகிறது.
ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது?: ஹிண்டன்பர்க் நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட தகவல்களின்படி, தவால் புச்சின் நிகர சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலர்கள். அவர் யூனிலீவர் நிறுவனத்தில் இருந்தபோது, வினோத் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், தவால் புச் பிளாக்ஸ்டோனில் மூத்த ஆலோசகராக இருந்தபோது, அந்த நிறுவனம் மைண்ட்ஸ்பேஸ் மற்றும் நெக்ஸஸ் செலக்ட் டிரஸ்ட் ஆகியவற்றை ஆதரித்து, சேபி IPO அனுமதி அளித்தது என்றும் ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாதபி புரி புச் மற்றும் அவருடைய கணவர் இருவரும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கையை மறுத்துள்ளனர். ஆகஸ்ட் 10-ஆம் தேதி இரவு ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை வெளியானது.
இதைத்தொடர்ந்து நள்ளிரவிலேயே அதற்கு பதில் அளித்த மாதபி புச் மற்றும் அவரது கணவர் தங்களுடைய பெயரை கெடுக்க முயற்சிப்பதற்காகவே, இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மேலும் ஹிண்டன்பர்க் மீது ஏற்கனவே செபி ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு பதிலடி தரவே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த காலங்களில் தங்களுடைய அனைத்து தகவல்களையும் தெரிவித்துள்ளதாகவும், யார் வந்து கேட்டாலும் இந்த ஆவணங்களை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications