மன்மோகன் சிங், ரத்தன் டாடா.. இந்த ஆண்டு பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்படும்?

டெல்லி: இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது நடப்பு ஆண்டில் யாருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பாரத ரத்னா விருது பெறுபவர்களுக்கான போட்டியில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் பெயரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரும் இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இருவருக்குமே மத்திய அரசு பாரத ரத்னா விருந்து விருது வழங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக பாரத ரத்னா விருது பார்க்கப்படுகிறது. நாட்டிற்காக சேவை செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதுவரை பாரத ரத்னா விருதுநினை 53 பேர் பெற்றுள்ளனர். அரசியல் , தொழில், கலை ,அறிவியல், இலக்கியம் உள்பட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட வருகிறது.

மன்மோகன் சிங், ரத்தன் டாடா.. இந்த ஆண்டு பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்படும்?

முதன் முதலில் 1954 ஆம் ஆண்டு தான் பாரத ரத்னா விருது அறிமுகம் செய்யப்பட்டது. பொதுவாக பாரத ரத்னா விருது பெறுபவர்கள் குறித்த பட்டியல் குடியரசு தினத்தை ஒட்டி வெளிவரும். குடியரசு தினத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் இந்த ஆண்டு யாருக்கு பாரத ரத்னா விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்மையில் மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவருமே இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபரான ரத்தன் டாடா திடீரென காலமானார். ரத்தன் டாடாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மகாராஷ்டிரா அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பிலும் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளின் தரப்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் தலித்துகளின் தலைவரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான கன்சிராமின் பெயரும் பாரத ரத்னா விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஜோதிராவ் புலே, சாவித்திரிபாய் புலே , பீகாரின் முதல் முதலமைச்சர் ஸ்ரீ கிருஷ்ணா சிங், மண்டல் கமிஷனுக்கு வித்திட்ட பிபி மண்டல் உள்ளிட்டோரியின் பெயரும் இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. பொதுவாக பாரத ரத்னா விருதை பிரதமர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்வார். ஒரு ஆண்டில் அதிகபட்சம் மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

முதன்முறையாக இந்தியாவில் பாரத ரத்னா விருது 1954ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. சி ராஜகோபாலாச்சாரி ,சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சிவி ராமன் ஆகிய மூவரும் 1954 ஆம் ஆண்டு இந்த விருதை பெற்றனர். இதுவரை 53 தனிநபர்கள் பாரத ரத்னா விருது பெற்றுள்ளனர், இதில் 18 பேருக்கு அவர்களின் இறப்புக்குப் பிறகு இந்த விருது வழங்கப்பட்டது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+