டெலிகிராம் அப்ளிகேஷனை தற்போது பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும் டெலிகிராம் அப்ளிகேஷனுக்கு எக்கச்சக்க ஃபேன் பேஸ் இருக்கிறது. சுமார் 900 மில்லியன் பயனர்கள் இப்போது வரை இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்திற்கு வெளியே உள்ள போர்ஜெட் விமான நிலையத்தில் டெலிகிராம் அப்ளிகேஷன் நிறுவனர் மற்றும் தலமைச் செயல் அதிகாரியான பாவெல் துரோவ் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஆன்லைன் குற்றங்களுக்கு டெலிகிராம் அப்ளிகேஷன் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இந்த அப்ளிகேஷனின் சிஇஓ பாவெல் துரோவ் இது போன்ற சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். தற்போது அர்ரெஸ்ட் வாரன்ட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பாவெல் துரோவ்-இன் கைது நடவடிக்கை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ரஷ்யா வெளியுறவு துறை அமைச்சகம், இந்த சூழ்நிலையை தடுத்து சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், மேற்கத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGOs) அவரது விடுதலையை கோருமா என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
யார் இந்த பாவெல் துரோவ்?: ரஷ்யாவில் பிறந்த 39 வயதான பாவெல் துரோவ், இலவசமாக பயன்படுத்தக்கூடிய டெலிகிராம் செயலியின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். இந்த மெசேஜிங் தளம் பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் வீ-சாட் போன்ற பிற சமூக ஊடக தளங்களுடன் போட்டியிடும் ஒரு அப்ளிகேஷன்.

ரஷ்யா, உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் யூனியனின் குடியரசுகளில் டெலிகிராம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இது உக்ரைனில் ரஷ்யாவின் போர் குறித்த தகவல்களுக்கான முக்கிய ஆதாரமாகவும் மாறியுள்ளது. சிலர் இந்த டெலிகிராம் அப்ளிகேஷனை "போருக்கான ஒரு விர்ச்சுவல் போர்க்களம்" என்று அழைக்கின்றனர்.
ஃபோர்ப்ஸ் நிறுவன அறிக்கையின்படி துரோவின் சொத்து மதிப்பு 15.5 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய மற்றும் பிரான்ஸ்-இல் உள்ள செய்தி நிறுவனங்கள் துரோவ் 2021-ஆம் ஆண்டில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றதாகக் கூறுகின்றன.
பல மோசடி சம்பவங்களும் குற்ற செயல்களும் டெலிகிராம் செயலியின் மூலம் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட டெலிகிராம் நிறுவனர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications