அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் டொனால்டு ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கி சூடு மூலம் அவரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. அவரை கொலை செய்ய முயற்சித்தது பென்சில்வேனியா பெத்தேல் பூங்காவைச் சேர்ந்த 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. யார் இந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்?
யார் இந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்?: டிரம்ப் பிரச்சாரத்தின் போது, தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் இருந்த மேடையில் இருந்து 130 கெஜம் தொலைவில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையின் கூரையின் மீது தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் இருந்துள்ளார்.

மேலும் அங்கிருந்து க்ரூக்ஸ் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. க்ரூக்ஸின் ஷாட்கள் டிரம்பின் காதை காயப்படுத்தியது. துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்த நிலையில், ஒரு அப்பாவி பார்வையாளரின் உயிர் பறிபோனது.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ட்ரம்ப் முழு உடல் நலத்தோடு இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக ட்ரம்ப்பிற்கு இன்னும் ஆதரவு பெருகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்ட 2 நபர்கள் சீக்ரெட் சர்வீஸ் வீரர்கள் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
டொனால்ட் டிரம்ப் தனது உரையின் போது காதில் துப்பாக்கியால் சுடப்பட்டதால், அவரது முகத்தில் ரத்தம் வழிந்தது. அவர் வெளிவருவதற்கு முன்பே அவரது பாதுகாவலர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.
டிரம்ப் பிரச்சார செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் கூறுகையில், "இந்த கொடூரமான செயலின் போது விரைவாக நடவடிக்கை எடுத்ததற்காக சட்ட அமலாக்கத் துறைக்கு நன்றி தெரிவித்தார். அவர் நலமாக உள்ளார், உள்ளூர் மருத்துவ மனையில் பரிசோதிக்கப்பட்டு வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பென்சில்வேனியாவில் நடந்த இந்த சம்பவத்திற்கு விரைவாக பதிலடி கொடுத்த சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தான் பேசிக் கொண்டிருக்கும்போது சட்டென கேட்ட சத்தம் அவருடைய கவனத்தை ஈர்த்ததாகவும், பேரணியில் கொல்லப்பட்ட குடும்பத்திற்கும், மோசமாக காயமடைந்த மற்றொரு நபரின் குடும்பத்திற்கும் எனது ஆறுதலை தெரிவிக்க விரும்புகிறேன் என்றும், இது போன்ற ஒரு செயல் நம் நாட்டில் நடக்க கூடாது. கடவுள் ஆசிர்வதிக்கட்டும் இந்த அமெரிக்காவை" என்று கூறி உணர்ச்சி போங்க பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.
டொனால்ட் ட்ரம்ப் ஜோ பைடன் குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது தான், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது.
More From GoodReturns

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications