2023 ஆம் ஆண்டுக்கான பில்லியனர்கள் பட்டியலில், ஃபோர்ப்ஸ் பல இந்தியப் பெயர்களை வெளியிட்டது. இதில் வணிகத்தைத் தொடங்கி பில்லியனர்களாக ஆன இந்தியப் பெண்களின் பெயரும் இதில் அடக்கம். 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பில்லியனர் பட்டியலில் 16 புதிய கோடீஸ்வரர்களை ஃபோர்ப்ஸ் பெயரிட்டுள்ளது, இதில் மூன்று பேர் பெண்கள்.
சமீபத்திய ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, சாவித்ரி ஜிண்டால், ரோஹிகா சைரஸ் மிஸ்ட்ரி, ரேகா ஜுன்ஜுன்வாலா ஆகியோருடன் வினோத் ராய் குப்தா மற்றும் லீனா திவாரி ஆகியோர் இந்தியாவின் ஐந்து பணக்கார பெண்களாக உள்ளனர். யார் இந்த வினோத் ராய் குப்தா..? அவருடைய வணிகப் புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பு, எப்படி அவர் இந்தியாவின் பணக்கார பெண்களில் ஒருவராக ஆனார் என்பதைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.

வினோத் ராய் குப்தா மற்றும் அவரது மகன் அனில் ராய் குப்தா ஆகியோர் பில்லியனர்கள் ஆனதற்குக் காரணம், ஹெவல்ஸ் இந்தியா நிறுவனம் நாட்டின் முதன்மையான நிறுவனமாக வைத்திருப்பது தான். ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, 77 வயதான வினோத் ராய் குப்தாவின் நிகர மதிப்பு 6.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 55,000 கோடிக்கு மேல்) மற்றும் அவர் இந்தியாவின் நான்காவது பணக்கார பெண்மணி ஆவார்.
ஹேவெல்ஸ் இந்தியா 1958 இல் வினோத் ராய் குப்தாவின் மறைந்த கணவர் கிமாத் ராய் குப்தா-வால் நிறுவப்பட்டது. இப்போது அவர்களின் மகன் அனில் ராய் குப்தா-வால் நடத்தப்படும் நிறுவனம், எலக்ட்ரிக்கல் வர்த்தக வணிகமாக நிறுவப்பட்டது.
ஹேவெல்ஸ் இந்தியா மின்சாரம் மற்றும் லைட் சாதனங்கள் முதல் மின்விசிறிகள், குளிர்சாதனப் பெட்டிகள், ஏசிகள் மற்றும் சலவை இயந்திரங்கள் வரை அனைத்தையும் தயாரிக்கிறது. ஹேவெல்ஸ் 14 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. அதன் தயாரிப்புகள் இப்போது 50 நாடுகளில் விற்கப்படுகின்றன.
வினோத் ராய் குப்தாவின் மகன் அனில் ராய் குப்தா தற்போது ஹாவெல்ஸ் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். குப்தா தில்லியில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், அமெரிக்காவின் வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் முடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications