இந்திய பேஷன் மற்றும் ஆடம்பர சந்தையில் முன்னணி நிறுவனமாகவும், டாடா குழுமத்திற்கு அதிகப்படியான லாபத்தை அளிக்கக் கூடிய நிறுவனமாகவும் திகழ்வது டைட்டன் நிறுவனம். பேஷன் பிரிவில் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களும் புதிதாகத் துவங்கப்பட்ட நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்தினாலும் டைட்டன் தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
இப்படிப்பட்ட நிறுவனத்தை டாடா நிர்வாகம் செய்து வந்தாலும், டாடா குழுமத்தை விடவும் ஒரு பிரிவு அதிகப் பங்குகளை இந்நிறுவனத்தில் வைத்துக்கொண்டு மிகப்பெரிய ஆதிக்கம் செய்து வருகிறது. அதுதான் தமிழ்நாடு அரசு.
டைட்டன் நிறுவனம்
டைட்டன் நிறுவனம் தனிஷ்க் பிராண்டின் கீழ் நகைகள், பாஸ்ட்டிராக் பிராண்டின் கீழ் கை கடிகாரங்கள் மற்றும் டைட்டன் ஐ பிளஸ் பிராண்டின் கீழ் மூக்குக் கண்ணாடிகள் ஆகியவற்றைச் சொந்தமாகத் தயாரித்து இந்திய ஃபேஷன் சந்தையில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது.
TIDCO
டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டைட்டன் நிறுவனம் TIDCO உடனான கூட்டணியில் உருவானது. 1984ஆம் ஆண்டுக் குவாட்ஸ் வாட்சுகளைத் தயாரிக்க இக்கூட்டணி ஓசூரில் தொழிற்சாலை அமைத்தது. தற்போது டைட்டன் நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியிலும், ஓசூரில் பதிவு செய்யப்பட்ட அலுவலகமும் உள்ளது.
டாடா பங்கு இருப்பு
டைட்டன் நிறுவனத்தில் டாடா குழுமத்தின் டாடா சன்ஸ், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்ரேஷன், டாடா கெமிக்கல், ஈவார்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ், Piem ஹோட்டலஸ் போன்ற 11 நிறுவனங்கள் இணைந்து 20.85 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு
ஆனால் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (TIDCO) டைட்டன் நிறுவனத்தில் மட்டும் சுமார் 24,74,76,720 பங்குகளை வைத்துள்ளது. இந்த 25 கோடி பங்குகள் டைட்டன் நிறுவனத்தின் மொத்த பங்கு இருப்பில் 27.88 சதவீதமாக உள்ளது. இதன் மூலம் டைட்டன் நிறுவனத்தில் அதிகப் பங்குகளை வைத்துள்ளது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் முதன்மை ப்ரோமோட்டராகவும் உள்ளது தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (TIDCO).
65000 கோடி ரூபாய்
மேலும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (TIDCO) வைத்துள்ள டைட்டன் பங்குகள் மட்டும் சுமார் 65000 கோடி ரூபாய் மதிப்புடையது. இதோடு டைட்டன் குழுமத்தில் சேர்மன் ஆகத் தமிழ்நாடு அரசு சார்பாகா என்.முருகானந்தம் உள்ளார். இவரைத் தொடர்ந்து வி அருண் ராய், பங்கஜ் குமார் பன்சால் ஆகிய 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டைட்டன் உயர்மட்ட குழுவில் உள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications