இந்தியாவை சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் இருமல் மருந்துகளான Ambronol, DOK-1 max ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த மருந்து நிறுவனத்தின் தயாரிப்பகள் தர நிர்ணயக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மரியான் பயோடெக் நிறுவனம் தங்களின் இருமல் மருந்துகளின் பாதுகாப்பு தரம் குறித்து எந்த விதமான உத்தரவாதமும் உலக சுகாதார அமைப்புக்கு தரவில்லை என்ற நிலையில் தான், இப்படி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது இந்திய மருத்துவ துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
யாரும் பயன்படுத்த வேண்டாம்
உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் இந்த இரு மருந்துகளில் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிலான, டைஎத்திலின் க்ளைக்கால், எத்திலீன் க்ளைக்கால் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஹூ தெரிவித்துள்ளது. இந்த இருமல் மருந்தானது வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வரப்படுகின்றது. இதற்கிடையில் உஸ்பெகிஸ்தான் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், இந்த இரண்டு மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.
19 குழந்தைகள் இறப்பு
கடந்த டிசம்பரில் இந்த இருமல் மருந்தை அருந்தியதால், தங்கள் நாட்டை சேர்ந்த 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு கடுமையாக குற்றம் சாட்டியிருந்தது.
உயிரிழந்தை குழந்தைகள் 2 - 7 நாட்கள் வரையில் அன்றாடம் இந்த மருந்தினை 5 ml வரையில் அருந்தியுள்ளனர். அவர்களுக்கு தினசரி 3 - 4 முறை கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மருந்தகங்கள் மூலம் பரிந்துரை
இந்த மருந்துகளை பெற்றோர் உள்ளூர் மருந்துகடைக்காரர்களின் பரிந்துரையின் பேரில் கொடுத்துள்ளனர். குழந்தைகள் உயிரிழப்புக்கு பிறகு அனைத்து மருந்துகளும் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது உலக சுகாதார அமைப்பு Ambronol, DOK-1 max என்ற இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
காம்பியா சம்பவம்
முன்னதாக கடந்த அக்டோபர் மாதத்தில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து, 6 குழந்தைகள் பலியாகியனர். அந்த சமயத்தில் உலக சுகாதார அமைப்பு இது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த துயர சம்பவத்திற்கு காரணம் மெய்டன் பார்மா நிறுவனமே என்றும் கூறப்படுகின்றது.
இந்திய நிறுவனங்களின் எதிர்காலம் என்ன?
சர்வதேச அளவில் மிகப்பெரிய மருந்து ஏற்றுமதியாளராக இருந்து வரும் இந்தியாவுக்கு இது பாதிப்பினை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகின்றது. பொதுவாக இருமல் மருந்து என்பது அவசியம் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. குறிப்பாக குழந்தைகள் இருமலால் சிரமப்படும்போது, அவசியம் அவர்களுக்கு தேவைப்படுகின்றது. அதன் காரணமாக இதனை நேரிடையாக மருத்துவரை கேட்காமல் மருந்தகங்களில் வாங்குவது கூடாது. பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் வாங்கி உட்கொள்ள கூடாது. இது பெரும் ஆபத்தினை விளைவிக்கலாம்.
மருத்துவர்களை நாடுங்கள்
மருத்துவர்கள் பொதுவாக உடல்நிலையை பரிசோதித்த பிறகே சரியானதொரு மருந்தை பரிந்துரை செய்வார்கள். இது இருமல் மருந்துக்கு மட்டும் அல்ல, அனைத்து மருந்துகளுக்கும் பொருந்தும். ஆக ஏதேனும் பிரச்சனை எனில் நீங்களாக மெடிக்கல் சென்று மருந்துகளை வாங்கி அருந்தாமல், மருத்துவரை நாடுவது மிக நல்லது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications