புனேவைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் வேறு வேலை கிடைக்காத போதிலும், தான் பார்த்துக் கொண்டிருந்த இன்ஃபோசிஸ் வேலையை ரிசைன் செய்துள்ளார். அதோடு அவர் ஏன் ரிசைன் செய்தார் என்ற காரணங்களையும் தனது லிங்க்டின் பதிவில் போஸ்ட் செய்துள்ளார்.
பூபேந்திர விஸ்வகர்மா என்ற அந்த பொறியாளர் தனது குடும்பத்திற்கான ஒரே வருமான ஆதாரமாக இருந்து வந்துள்ளார். அப்படி இருந்தும் தனது வேலையை ரிசைன் செய்ய தூண்டிய 6 விஷயங்கள் குறித்து தனது பதிவில் பட்டியலிட்டுள்ளார்.

பூபேந்திரா தன்னுடைய பதிவில், "இன்போசிஸில் நான் பணியாற்றிய காலத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்டேன், அவை அனைத்தும் வேறு ஒரு வேலை இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க என்னை கட்டாயப்படுத்தியது. நான் அங்கு எதிர்கொண்ட சவால்களை பற்றி வெளிப்படையாக பேச விரும்புகிறேன்.
ஏனெனில் அவை கார்ப்பரேட் பணியிடங்களில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன." என தனது போஸ்ட்டை தொடங்கியுள்ளார். அதன் பிறகு அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்ற விவரங்களையும் பேரகிராப்-ஆக பதிவிட்டிருந்தார்.
சம்பள வளர்ச்சி இல்லை: சிஸ்டம் இன்ஜினியரிலிருந்து சீனியர் சிஸ்டம் இன்ஜினியராக பதவி உயர்வு கிடைத்தாலும் சம்பள உயர்வு இல்லாமல் இருந்துள்ளது. 3 வருட கடின உழைப்பு மற்றும் நிலையான செயல் திறனை வழங்கிய போதிலும் பூபேந்திராவுக்கு எந்தவித அங்கீகாரமும் கிடைக்கவில்லை.
நியாயமற்ற பனிச்சுமை: அவருடைய டீம்-இல் இருந்த உறுப்பினர்கள் 50 பேரில் இருந்து 30 பேராக குறைக்கப்பட்டுள்ளனர். அப்போது கூடுதல் பணிசுமை மீதமிருந்த ஊழியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அதோடு புதிய பணியாளர்களையும் பணியமர்த்தவில்லை.
தொழில் வளர்ச்சி இல்லை: நஷ்டம் தரும் ஒரு பணியில் அசைன் செய்யப்பட்டதால் தனக்கு எந்தவித சம்பள உயர்வும் பூபேந்திராவுக்கு கொடுக்கப்படவில்லை. இதனால் தொழில் ரீதியாக மந்த நிலையை மட்டுமே பூபேந்திரா உணர்ந்து வந்துள்ளார்.
வாடிக்கையாளர் சூழல்: உடனடியாக பதில்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகள் இன்னும் அழுத்தமான சூழலை பூபேந்திராவுக்கு உருவாக்கியுள்ளது. சிறு விஷயங்களுக்கும் தொடர்ச்சியான எஸ்கேலேஷன்கள் இருந்ததால் டாக்ஸிக் ஒர்க் கல்ச்சர்-ஆக இருந்ததாக தனது நான்காவது காரணத்தை பூபேந்திரா கூறியிருந்தார்.
அங்கீகாரம் வழங்கப்படவில்லை: உடன் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சீனியர் அதிகாரிகளிடம் பாராட்டுகளை பெற்ற போதிலும் அவை எதுவும் பதவி உயர்வுகள் சம்பள உயர்வுகள் அல்லது தொழில் முன்னேற்றத்திற்கு உதவவில்லை. தனது கடுமையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதாகவும் பூபேந்திரா உணர்ந்துள்ளார்.
வெளிநாட்டு பணி வாய்ப்புகள் மற்றும் பிராந்திய சார்பு: வெளிநாட்டு பணி வாய்ப்புகள் திறமையின் அடிப்படையில் அல்லாமல், குறிப்பிட்ட மொழிகள் பேசும் ஊழியர்களை ஆதரித்து, அவரைப் போன்ற இந்தி பேசும் ஊழியர்களை புறக்கணித்ததாக பூபேந்திரா கூறினார்.
இந்தப் பிரச்சினைகளை எல்லாம் கூறிய பூபேந்திரா, "எனக்கு மட்டுமல்ல.. இது போன்ற பிரச்சனைகள் எண்ணற்ற ஊழியர்களுக்கும் உள்ளன. இந்த அடிப்படைப் பிரச்சனைகளை புறக்கணித்த ஒரு நிறுவனத்திற்காக எனது சுயமரியாதை மற்றும் மன ஆரோக்கியத்தை விட்டு என்னால் இருக்க முடியாது என்பதனால் தான் வெளியேற முடிவு செய்தேன்", என்றும் எழுதி இருந்தார்.
அதோடு பூபேந்திரா கார்ப்பரேட் மேனேஜர்கள் எதார்த்தங்களை மறைப்பதை நிறுத்திவிட்டு இது போன்ற பிரச்சனைகளை தீர்க்கத் தொடங்க வேண்டும். ஊழியர்கள் ஆசைகள் கொண்ட மனிதர்கள் தான். இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் நிறுவனங்கள் திறமையான ஊழியர்களை இழப்பது மட்டுமல்லாமல் தங்கள் நம்பகத்தன்மையையும் இழக்க நேரிடும் என்று கூறி தனது பதிவை நிறைவு செய்திருந்தார்.
இவருடைய பதிவுக்கு பல்வேறு கமெண்ட்ஸ்கள் வர தொடங்கியது. சீனியர் சிஸ்டம் இன்ஜினியராக மாறுவது ஒரு பிரமோஷனுக்காக மட்டுமே. ஒரு சிஸ்டம் இன்ஜினியராக சேரும் எவரும் ஒரு வருடம் கழித்து சீனியர் சிஸ்டம் இன்ஜினியராக இருப்பார்கள் என்று ஒருவர் பதிவிட்டு இருந்தார்.
மற்றொரு நபர் நான் உங்களுடைய கருத்துக்கு முழுமையாக உடன்படுகிறேன் சிஸ்டம் இன்ஜினியரிலிருந்து சீனியர் சிஸ்டம் இன்ஜினியர்-ஆன பின்னர் அசோசியேட் கன்சல்டன்ட் வரை 7 சதவீத உயர்வுடன் வைத்திருப்பார்கள். ஒருவேளை நாம் மேனேஜரிடம் சென்று சம்பளத்தை பற்றி பேசினால் அவர் HR-இடம் கேளுங்கள் என்று சொல்வார். HR-இடம் பேசினால் அவர் மேனேஜரிடம் கேளுங்கள் என்று சொல்வார் என கருத்து தெரிவித்திருந்தார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications