திவாலான நிறுவனங்களை தேடி தேடி வாங்கும் அதானி.. ரூ.50000 கோடி முதலீட்டின் பின்னணி என்ன?

அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி இதுவரை 14 திவாலான நிறுவனங்களை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அதானி ஏன் இப்படி திவாலான நிறுவனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார் என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

அதானி குழுமம் இதுவரை 50,000 கோடி ரூபாயை செலவு செய்து மொத்தம் 14 திவாலான நிறுவனங்களை கையகப்படுத்தி உள்ளது. இவ்வளவு பெரிய ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஏன் திவாலான நிறுவனங்களை வாங்குகிறது இதற்காக ஏன் இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டு இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பின்னால் ஒரு தந்திரம் இருக்கிறது.

திவாலான நிறுவனங்களை தேடி தேடி வாங்கும் அதானி.. ரூ.50000 கோடி முதலீட்டின் பின்னணி என்ன?


இந்த திவாலான நிறுவனங்கள் அனைத்துமே Insolvency and Bankruptcy Code எனப்படும் ஐபிசி நடைமுறையின் கீழ் தான் வாங்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இப்படி ஒரு நடைமுறையை கொண்டு வந்தது. ஐபிசி நடைமுறை திவாலான நிறுவனங்களில் நிலவும் கடன் பிரச்னைகளை சரி செய்வதற்கான ஒரு சட்ட ரீதியான நடைமுறையை வழங்குகிறது.

இந்த ஐபிசி விதியின் படி ஒரு நிறுவனம் தன்னுடைய கடன்களை செலுத்த முடியாமல் தவிக்கிறது, இதன் மூலம் அந்த நிறுவனம் ஒரு செயல்படாத சொத்தாக அதாவது NON PERFORMING ASSETஆக மாறுகிறது. எனவே கடன் வழங்குநர்கள் இதனை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் கொண்டு செல்வார்கள்.

இது போன்ற திவால் நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க கூடிய சிறப்பு நீதிமன்ற அமைப்பு தான் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஆகும். இந்த தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் 180 நாட்களுக்குள் இந்த கடன் நிலுவைப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

இந்த காலகட்டத்தில் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் இவ்வாறு திவால் நிலையில் இருக்கும் நிறுவனங்களை வாங்குவதற்கு முன் வரக்கூடும். அப்போது தள்ளுபடி விலையில் இத்தகைய நிறுவனங்களை அவர்களால் வாங்க முடியும். இந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பில் இருந்து கிட்டத்தட்ட 60 - 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் அதனை வாங்கலாம்.

இவ்வாறு நிறுவனத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை கடன் வழங்குநர்கள் பகிர்ந்து கொள்வார்கள். முழுமையான தொகை இல்லை என்றால் கூட ஒரு கணிசமான தொகை கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு கிடைக்கும். எனவே தான் பல்வேறு பெரிய நிறுவனங்களும் குறிப்பாக ரொக்கமாக நிறைய பணத்தை கையிருப்பாக வைத்திருக்கும் பெரிய நிறுவனங்கள் இதுபோல ஐபிசி நடைமுறை வாயிலாக திவாலான நிறுவனங்களை வாங்குகின்றன.

குறிப்பாக அதானி குழுமம் இப்படி ஒரு முறையை .அண்மைக்காலமாகவே பின்பற்றி வருகிறது. இதன் மூலம் பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்களை தள்ளுபடி விலையில் அதானி குழுமம் வாங்குகிறது. இதன் பின்னர் அந்த தொழிலை வலுப்படுத்தி அதனை வளர செய்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட துறையை சேர்ந்த ஒரு நிறுவனத்தை அடித்தளத்தில் இருந்து முதலீடு செய்து உருவாக்குவதை விட ஏற்கனவே உருவான ஒரு நிறுவனத்தை வாங்கி வலுப்படுத்துவது என்பது இவர்களுக்கு லாபமானதாக பார்க்கப்படுகிறது. இப்படி தான் அதானி குழுமம் Lanco and Essar Power, Aditya Estates and TEN BKC, Raigarh Energy Generation Limited உள்ளிட்ட நிறுவனங்களை கையகப்படுத்தியது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+