மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பல்வேறு செல்வந்தர்களும் தங்களுக்கு சொந்தமான குடியிருப்புகளை விற்பனை செய்யும் போக்கு அண்மை காலமாக அதிகரித்துள்ளது.
மும்பையில் ஆடம்பரமான ரியல் எஸ்டேட் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக 40 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட குடியிருப்புகளின் விற்பனை அதிகரித்து வருவதாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன. 2023 ஆம் ஆண்டில் மட்டும் இந்த பிரிவில் 247% விற்பனை அதிகரித்தது.

மும்பையில் தற்போது சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருப்பதால் பல்வேறு வீட்டு உரிமையாளர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வீடுகளை விற்பனை செய்து பணமாக்குவது தெரியவந்துள்ளது. குறிப்பாக பல்வேறு பிரபலங்களும் , உயர் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களும் மும்பையில் தங்களுக்கு சொந்தமான வீடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
அண்மையில் கூட பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா மும்பையில் தனக்கு சொந்தமாக இருந்த நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்தார். 2024 ஆம் ஆண்டில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட 140 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன . இதன் மொத்த மதிப்பு 12,300 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இதில் 21 வீடுகள் 40 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை மதிப்பு கொண்டவையாம்.
அதாவது 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் இது 8 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது 2025 ஆம் ஆண்டிலும் இந்த போக்கு நீடிக்கிறது. பிரபல நடிகர் அமிதாப்பச்சன் அந்தேரியில் தனக்கு சொந்தமாக இருந்த 83 கோடி ரூபாய் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பை விற்பனை செய்தார் ,அதேபோல பிரபல தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லா மலபார் ஹில் பகுதியில் தனக்கு சொந்தமாக இருந்த 210 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டினை விற்பனை செய்தார்.
மும்பையில் பிரபலங்கள் தற்போது வீடுகளை விற்பனை செய்வதற்கு முக்கிய காரணமாக சொத்துக்களின் மதிப்பு உயர்ந்திருப்பது சொல்லப்படுகிறது. தெற்கு மும்பை பகுதியில் 2020 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை வீடுகளின் மதிப்பு 22 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாம். பலரும் இந்த விலை உயர்வை பயன்படுத்தி சொத்துக்களை விற்பனை செய்து பணமாக்கி வருகின்றனர் என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன.
இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட வீடுகளில் 63 சதவீதம் பேர் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் என தெரியவந்துள்ளது . பங்குகளில் ஏற்பட்ட நஷ்டங்களை ஈடு கட்டுவதற்காக ரியல் எஸ்டேட் மூலம் கிடைத்த லாபங்களை சமன் செய்து கொள்ளலாம் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே ஈக்விட்டியில் முதலீடு செய்திருக்கக்கூடிய முதலீட்டாளர்கள் இந்த இதன் மூலம் 1.25 கோடி வரை வரி சேமிக்க முடியும் என்பதால் வீடுகளில் விற்பனை செய்வதாக தெரிகிறது.
இப்போது மும்பையில் வீடுகளின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதால் இங்கே விற்பனை செய்துவிட்டு , வளர்ந்து வரும் பகுதிகளில் முதலீடு செய்ய பலரும் முன் வந்துள்ளனர். நவி மும்பை, புனே ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் முதலீடுகள் அதிகரித்திருப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications