பெங்களூரு: பன்னாட்டு நிறுவனங்கள் ஜிசிசி எனப்படும் குளோபல் கெபாபிலிட்டி சென்டர்கள் (GCC - Global Capablity Centers) அதாவது தங்களின் கிளைகளை இந்தியாவில் நிறுவ ஆர்வம் காட்டி வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய நிறுவன செயல்பாடுகளான பேக் ஆபீஸ் ஃபங்க்ஷன் , ஐடி அசிஸ்டன்ஸ் மற்றும் கஸ்டமர் ரிலேஷன்ஷிப் உள்ளிட்டவற்றை செயல்படுத்த இந்த மையங்களை பயன்படுத்துகின்றன.
இந்தியாவில் தங்களுடைய ஜிசிசி மையங்களை நிறுவ பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களை முதன்மையாக தேர்வு செய்கின்றன. தற்போது இந்தியாவில் செயல்படக்கூடிய ஜிசிசி மையங்களில் 60% பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் தான் இருக்கிறது.

அண்மையில் ரியல் எஸ்டேட் கன்சல்டிங் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் ஜிசிசி மையங்கள் லீசுக்கு எடுத்துள்ள அலுவலகங்களின் அளவு 1.30 லட்சம் சதுர அடி ஆகும். இதுவே புனே, மும்பை மற்றும் டெல்லியில் 70 ஆயிரம் சதுர அடி ஆக மட்டுமே இருக்கிறது.
இந்த நிறுவனங்கள் ஏன் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களை முதன்மையாக தேர்வு செய்கின்றன என்பதற்கான காரணங்களை தற்போது பார்க்கலாம்.
பன்னாட்டு நிறுவனங்களை பொறுத்தவரை பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் திறன்மிகு ஊழியர்கள் பொருத்தமான ஊதியத்தில் கிடைப்பதாக நம்புகின்றன. எனவே தான் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களை விடுத்து இவை ஹைதராபாத் மற்றும் பெங்களூருவை நோக்கி படையெடுக்கின்றன. இது பணியாளர்கள் கிடைக்கிறார்கள் என்பதைவிட பல்வேறு துறை சார்ந்த திறன்மிகு பணியாளர்கள் இந்த இரண்டு நகரங்களிலும் அதிக அளவில் கிடைக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
குறிப்பாக ஹைதராபாத் நகரம் அறிவியல் ஆய்வுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஜிசிசி மையங்களை ஈர்க்கிறது. பெங்களூரு நகரத்தை பொருத்தவரை அங்கே மத்திய மற்றும் மூத்த தொழில் நுட்ப நிபுணர்கள் அதிக அளவில் கிடைக்கின்றனர்.
ஜிசிசி மையங்களை அமைப்பதற்கு தேவையான அலுவலக இடங்கள் சமகால எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்த இரண்டு நகரங்களில் தான் கிடைக்கின்றன. அதாவது நெகிழ்வு தன்மையுடன் கூடிய அலுவலக தளங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், ஓய்வு இடங்கள் ஆகிய ஒருங்கிணைந்த அலுவலக இடங்கள் இந்த இரண்டு நகரங்களில் தான் கிடைக்கின்றன என சொல்லப்படுகிறது.
ஜிசிசி மையங்களை பொருத்தவரை தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் நிறைந்த நகரங்களிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிறைந்த அலுவலகங்களிலும் தான் தங்களுடைய மையங்களை நிறுவுவதற்கு விரும்புகின்றன. ஏனெனில் இந்த பகுதிகளில் திறன்மிகு பணியாளர்கள் எளிதாக கிடைப்பார்கள் .
எனவே இவை பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களை தேர்வு செய்கின்றன. பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களை பொருத்தவரை புதிதாக ஒரு தொழில் தொடங்குவதற்கு மற்றும் அலுவலகங்களை அமைப்பதற்கு ஏற்ற எளிமையான கொள்கைகளையும் சூழல்களையும் கொண்டு இருக்கின்றன.
குறிப்பாக இவை வளர்ந்து வரும் துறைகளுக்கு ஏற்ற நகரங்களாக இருப்பதால்தான் இங்கே அதிக எண்ணிக்கையிலான மையங்கள் அமைகின்றன. அதுமட்டுமின்றி ஆங்கில புலமை கொண்ட ஊழியர்கள் அதிகம் கிடைப்பது மற்றும் வானிலை சூழல்கள் அந்த நகரத்தின் கலாச்சாரம் ஆகியவையும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுடன் ஒப்பிடும்போது ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களில் அலுவலக இடங்களுக்கான வாடகை விகிதம் குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த இரண்டு நகரங்களிலும் ஒரு சதுர அடிக்கு 70 ரூபாய் என்று சராசரி வாடகை அளவிலேயே அலுவலகங்களை வாடகைக்கு எடுக்க முடியும் என சொல்லப்படுகிறது.
இந்தியாவில் 2000 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளை அமைத்து வருகின்றன .2024 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 1600 ஜிசிசி மையங்கள் அமைந்துள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications