இந்தியாவை விட சீனாவின் வளர்ச்சி அதிகரிக்க இந்த ஒரு விஷயம் தான் காரணம் தெரியுமா..?

சென்னை: இந்தியா சீனா இரண்டு நாடுகளுமே போட்டி போட்டுக் கொண்டு ஆசிய பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத சக்திகளாக உருவாகி இருக்கின்றன. 1990 களில் இந்தியாவும் சீனாவும் தங்களுடைய பொருளாதாரத்தை உலகமயமாக்கின. ஆனால் வளர்ச்சி என பார்க்கும்போது இந்தியாவை விட சீனாவின் வளர்ச்சி சற்றே அதிகமாக தான் இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பது தெரியவந்துள்ளது.

சீனா ஒரு கட்சி ஆட்சி முறையை கொண்ட ஒரு நாடு, ஆனால் இந்தியா ஜனநாயக ரீதியிலான ஒரு நாடு. எனவே ஆட்சி மாற்றம் கொள்கை மாற்றம் இங்கே தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் சீனாவில் அப்படி இல்லை.

 இந்தியாவை விட சீனாவின் வளர்ச்சி அதிகரிக்க இந்த ஒரு விஷயம் தான் காரணம் தெரியுமா..?

1990க்கு பிறகு சீனா உலகின் தொழிற்சாலையாக மாறியது. பொம்மை, மின்னணு சாதனங்கள், மின்சார கார்கள் மற்றும் செமி கண்டக்டர்கள் என சீனாவின் கவனம் உற்பத்தியில் தான் இருந்தது. ஆனால் இந்தியா என பார்க்கும்போது ஐடி உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பெரிய வளர்ச்சியை கண்டது. ஆனால் இந்த இரண்டுக்குமே அடிப்படையாக இருப்பது கல்விதான்.

இந்த கல்வி தான் இரண்டு நாடுகளின் வளர்ச்சியை தீர்மானித்தது என்கின்றனர் ஆய்வாளர்கள். நிதின் குமார் பாரதி மற்றும் லி யாங் ஆகிய இருவரும் இணைந்து Making of China and India in 21st Century என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

1900களில் இந்தியாவில் கல்வி அறிவு எப்படி இருந்தது, சீனாவில் கல்வி அறிவு எப்படி இருந்தது எந்த துறை சார்ந்த கல்விக்கு இந்தியாவும் சீனாவும் கவனம் கொடுத்தன என்பது குறித்த விரிவான தகவல் அதில் இடம் பெற்று இருக்கிறது.

அதில் இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தின் போது சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மாணவர்களின் எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகமாக இருந்ததாம். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் சீனாவில் ஆட்சியில் இருந்த கிங் அரச வம்ச மக்களுக்கு ராணுவத்திற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் தேவை என நினைத்தது.

எனவே தொழில் சார்ந்த திறன்கள் மக்களுக்கு வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி அது தொடர்பான கல்வியை அவர்களுக்கு வழங்கியது .அதே சமயத்தில் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது அப்போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகள் உருவாவதை விரும்பவில்லை.

மாறாக அவர்கள் இந்தியர்கள் ஒரு கிளர்க் மற்றும் ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டர் போன்ற பணிகளில் அமரும் வகையிலான ஒரு கல்வி முறையை இந்தியாவில் அறிமுகம் செய்து மக்கள் மீது திணித்தனர்.

எனவே மக்கள் படிப்போம் படித்து முடித்து அரசு வேலைக்கு செல்வோம், கல்வி என்பது வேலைக்கு செல்வதற்கான ஒரு கருவி என்ற அளவிலேயே நின்றுவிட்டது. ஆனால் சீனாவில் கல்வி என்பது தொழில்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பொருளாதாரத்திற்கும் ஆனது என்ற அடிப்படையில் கற்பிக்கப்பட்டதாம்.

இதுதான் இந்தியாவை விட சீனாவின் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கு காரணம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். குறிப்பாக கல்லூரி அளவில் பார்க்கும்போது இந்தியாவில் சமூக அறிவியல் சார்ந்த கல்வியைப் படித்தவர்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டுக்கும் மேல் இருக்கிறது. அதுவே சீனாவில் அதை வெறும் 25% தான். அதற்கு நிகரான அளவில் பொறியியல், வேளாண்மை பிரிவுகளில் சீனர்கள் பட்டப்படிப்பை முடித்தனர்.

இந்தியாவில் பெரும்பாலானவர்கள் சமூக அறிவியல் சார்ந்த பிரிவுகளில் பட்டப் படிப்பை படித்திருந்த நேரத்தில் சீனாவோ தங்களுடைய மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களை ஆசிரியர்கள் , விஞ்ஞானிகள் ,பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் வேளாண் நிபுணர்கள் என்ற படிப்புகளை நோக்கி அழைத்து சென்றது.

உற்பத்தி துறையில் சீனா அசைக்க முடியாத சக்தியாக இருப்பதற்கு அந்த நாட்டு அரசு மக்களுக்கு அடிப்படை கல்வி அறிவோடு தொழில் ரீதியான திறன்களையும் வழங்கியதே காரணம் என சொல்லப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+