இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பில் இருந்தே விவசாயம், தொழில்துறையினர் தங்களின் ஊழியர்களுக்கு வருடம் ஒரு முறை பண்டிகை காலத்தைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காகக் கூடுதல் சம்பளத்தை இனாமாக அளிக்கப்படுவது வழக்கமாக இருந்தது.
பண்டிகை காலத்தில் அளிக்கப்படும் இந்தக் கூடுதல் சம்பளம் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு காலகட்டத்தில் அதாவது பிராந்திய பண்டிகைக்கு ஏற்ப கொடுக்கப்பட்டு வந்தது. உதாரணமாகப் பொங்கல், தசரா போன்ற பண்டிகை காலகட்டத்தில் ஊருக்கு ஏற்ப இந்தப் போனஸ் தொகை வழங்கப்பட்டது.

இந்தப் போனஸ் தொகை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெரும் மாற்றத்தைச் சந்தித்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரையில் இந்தியாவில் நிறுவனங்கள், அமைப்புகள், தொழிற்சாலைகள் என அனைத்து தரப்பினரும் தங்கள் ஊழியர்களுக்கு வார சம்பளமாகத் தான் அளித்து வந்தது. அப்போது இந்தியா முழுவதும் பரவலாக இருந்த டெக்ஸ்டைல் மில் மற்றும் மாவு மில்-களில் தொழிலாளர்களுக்கு வார சம்பள அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்பட்டது.
இதனால் அனைத்து ஊழியர்களுக்கும் வருடத்தில் 52 வாரமும் சம்பளம் அளிக்கப்பட்டு வந்தது. இது பிரிட்டிஷ் ஆட்சிக்கு வந்த பின்பு அனைத்துத் துறை, தொழில்களுக்கும் மாதம் சம்பளம் அளிக்கும் முறைக்கு வந்தது. இதோடு வருடத்தில் அளிக்கப்படும் பல்வேறு விடுமுறைகளைக் கணக்கில் கொண்டால் 48 வாரம் மட்டுமே சம்பளம் அளிக்கப்படும் நிலை உருவானது.
இது ஆங்கிலேயர் ஆட்சியில் பணத்தை மிச்சப்படுத்தப் பெரிய வாய்ப்பாக அமைந்தது என்றால் மிகையில்லை. இதை அப்படியே நடைமுறைப்படுத்த முயன்ற ஆங்கிலேயர்கள் கட்டாயப்படுத்தி நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தினர். இதனால் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கத் துவங்கியது.
அதாவது 52 வாரம் என்றால் 13 மாதம் சம்பளம் கிடைக்கும், இதுவே 48 வாரம் என்றால் 12 மாதம் சம்பளம் மட்டுமே கிடைக்கும். இதனால் ஒரு மாதம் சம்பளத்தைச் சாமானிய ஊழியர்கள் இழக்கும் நிலை உருவானது. 1930-1940 வரையில் மகாராஷ்டிரா முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதற்காகப் போராட்டம் நடந்தது.
பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பின்பு ஒவ்வொரு மாதம் என 12 மாதத்திற்குச் சம்பளமும் 13 வது மாத சம்பளத்தைத் தீபாவளிக்கு அளிக்கப்படும் என 1940 ஜூன் மாதம் சட்டத்தை இயற்றியது. இந்த 13வது சம்பளம் தான் பின்னாளில் தீபாவளி போன்ஸ் ஆக மாறி இன்று வரையில் நடைமுறையில் உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர்ப் பலர் தொழிலாளர்கள் 1940ல் இயற்றப்பட்ட பழைய விதிகளைப் பின்பற்றாமல் ஊழியர்களுக்கு இந்த 13வது மாத சம்பளம் அதாவது போனஸ் தொகையை அளிக்காமல் ஊழியர்களை ஏமாற்றினர்.
இதைச் சரி செய்ய இந்திய அரசு அனைத்து நிறுவனங்களையும் ஒழுங்குமுறை நடவடிக்கையில் உட்படுத்தி, முதலாளிகள் தங்கள் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைப் போனஸாக ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியது.
இந்த ஒழுங்குமுறை நடவடிக்கையை Payment of Bonus Act, 1965 என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின்படி, நிறுவனம் தனது ஊழியர்களுக்குப் போனஸ் குறைந்தபட்ச விகிதமான 8.33% மற்றும் அதிகபட்ச விகிதம் 20% இல் செலுத்தப்பட வேண்டும்.
ஒரு நிறுவனத்தில் ஒருவர் வருடத்தில் 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து 10,000/- அல்லது அதற்குக் கீழ் சம்பளம் பெற்று இருந்தால் Payment of Bonus Act, 1965 சட்டத்தின் கீழ் போனஸ் பெற உரிமை உண்டு. இந்தப் போனஸ் அதிகபட்சமாக 3,500 ரூபாயாக இருக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications