கடந்த இரண்டு மாதங்களில், 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ப்ரோமோட்டர்கள் அதாவது உரிமையாளர்கள் தங்களின் பங்கு இருப்பை பொது சந்தையில் விற்பனை செய்து சுமார் 33,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்டியுள்ளனர்.
பொதுவாக ஒரு நிறுவனத்தின் ப்ரோமோட்டர்கள் தங்களது பங்கு இருப்பை விற்பனை செய்வது என்பது மிகவும் அரிதான நிகழ்வு. முக்கியமான வர்த்தக விரிவாக்கத்திற்கும், நிறுவனத்தைச் சரிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பது போன்ற முக்கியமான காலகட்டத்தில் தான் ப்ரோமோட்டர்கள் பங்குகளை விற்பனை செய்வார்கள்.

ஆனால் தற்போது பங்குச் சந்தையில் நிறுவனங்களின் மதிப்பீடுகள் (Valuations) மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால், இத்தகையை மதிப்பீடுகளை மீண்டும் அடைவது அபூர்வம் என்பதை தெரிந்துகொண்டு நிறுவன உரிமையாளர்கள் தாங்கள் வைத்திருக்கும் பங்குகளின் ஒரு பகுதியை லாபத்திற்காக விற்பனை செய்யத் தூண்டப்பட்டுள்ளனர்.
இதன் விளைவாகவே கடந்த இரண்டு மாதங்களில், 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ப்ரோமோட்டர்கள் 33,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இது கிட்டத்தட்ட ஒரு டிரெண்டாகவே மாறியுள்ளது என்றால் மிகையில்லை.
2020 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று சமயத்தில் இதேபோல் ப்ரோமோட்டர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர், இதேபோன்ற டிரெண்ட் மீண்டும் உருவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் இதுவரை 65,000 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பங்குகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவன ப்ரோமோட்டர்கள் விற்பனை செய்துள்ளனர். இது, 2020ல் கொரோனா காலத்தில் 78,500 கோடி ரூபாயாக இருந்தது, இந்த வருடம் இதை முறியடித்து புதிய சாதனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனத்தைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள், எனவே சந்தை சூழ்நிலை தங்களுக்குச் சாதகமாக இருக்கும் வேளையில், அதாவது மதிப்பீடு அதிகமாக இருக்கும் போதும், நிறுவனப் பங்குகளுக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கும் போதும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பங்குகளை விற்பனை செய்து லாபம் ஈட்டியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் வெறும் 48,000 கோடி மதிப்பிலான பங்குகளை மட்டுமே நிறுவன உரிமையாளர்கள் விற்பனை செய்திருந்த வேளையில் 2024ல் முதல் 6 மாதத்திலேயே 65,000 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பங்குகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளில் பங்கு விற்பனை அளவுகளைப் பார்க்கும் போது 2022 ஆம் ஆண்டில் 25,400 கோடியும், 2021 ஆம் ஆண்டில் 54,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு உள்நாட்டு ப்ரோமோட்டர்களை காட்டிலும் வெளிநாட்டு ப்ரோமோட்டர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வருவது அதிகரித்துள்ளது.
கடந்த வாரம், பிரிட்டன் நாட்டின் வோடாஃபோன் குழுமம், திறந்த சந்தை பரிவர்த்தனை மூலம் இண்டஸ் டவர்களில் (Indus Towers) இருந்த தனது 18% பங்குகளை 15,300 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது.
இதேபோல், இந்த மாத தொடக்கத்தில், உலகளாவிய முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன் (Blackstone) தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை நிறுவனமான Mphasis-ல் தனது பங்கு இருப்பில் சுமார் 15.08 சதவீத பங்குகளை 6735 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.
ZF group கடந்த வாரம் தனது இந்தியக் கிளை நிறுவனமான ZF commerical vehicle control நிறுவனத்தில் 2193 கோடி ரூபாய் மதிப்பிலான 7.5 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது.
கடந்த வாரம் Gland Pharma நிறுவனத்தின் 1754 கோடி ரூபாய் பங்குகளை அதன் தாய் நிறுவனமான Fosun Pharma விற்பனை செய்துள்ளது.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications