உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, நொடிக்கு நொடி கோடிகளை சம்பாதிப்பதன் மர்மம் என்ன? அவரிடம் இருக்கும் பணத்தை அவராலேயே செலவு செய்து முடிக்க முடியாது என்பது நமக்கு தெரியும். அப்படியிருந்தும் ஏன் ஓயாமல் உழைக்கிறார்?
இந்த கேள்விக்குத் தனது பாணியில் நச்சென்று பதில் சொல்லியிருக்கிறார் மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி. அம்பானியின் உழைப்பிற்கு பின்னால் இருக்கும் அந்த சுவாரசியமான காரணம் என்ன என்பது பற்றி மம்மூட்டி பேசிய வீடியோ இப்போது இணையத்தை கலக்கி வருகிறது. அந்த சுவாரசிய தகவல் இதோ..

இந்தியா சினிமா வரலாற்றில் மிகவும் பிரபல நடிகர்களில் ஒருவரான மம்மூட்டி தெரியாதவர்கள் பெரிதும் இருக்க முடியாது. தொடர்ந்து பல தசாப்தங்களாக தனது நடிப்பு திறமையின் மூலம் மக்களின் உள்ளங்களை வென்றுள்ளவர். பல தேசிய விருதுகளை பெற்றவர். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் மம்மூட்டி, கடந்த 1975 ஆண்டு முதன் முதலாக திரையில் தோன்றினார். 55 ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் தனது நடிப்பை மக்களுக்கு கொடுத்து வருபவர்.கடந்த 4 ஆண்டுகளில் அவர் நடித்த பிரமயுகம், காதல் - தி கோர், நண்பகல் நேரத்து மயக்கம், ரோர்ஷாக், புழு போன்ற திரைப்படங்கள் அடங்கும்.
ஐந்து தசாப்தங்களுக்கு பிறகும், எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லாத நிலையில், மம்மூட்டியை தொடர்ந்து உழைக்க வைப்பது எது? இது குறித்து அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்த விஷயங்களைப் பற்றித்தான் இப்பதிவில் பார்க்க இருக்கிறோம்.
பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கையை வாழ எனக்கு இனி பணம் தேவையில்லை. 90 அல்லது 100 வயதாகும் அரசியல்வாதிகள் ஏன் இன்னும் அரசியலில் இருக்க விரும்புகிறார்கள்? முகேஷ் அம்பானி ஏன் இன்னும் இவ்வளவு பணம் சம்பாதித்து கொண்டே இருக்கிறார்? அவர் சம்பாதிக்கும் எல்லாப் பணத்தையும் அவரே பயன்படுத்த போவதில்லை. அது அவர்களுக்குக் கிடைக்கும் ஒருவித மகிழ்ச்சி (Pleasure). நான் என்னை அம்பானியுடன் ஒப்பிடவில்லை. நான் சொல்ல வருவது என்னவென்றால், இது மனித இயல்பு. உங்களிடம் எது இருந்தாலும், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று தோன்றும். அதைத்தான் பேராசை என்று சொல்கிறேன்.
நடிப்பு என்பது சில கலைஞர்களுக்கு அவர்கள் சுவாசிக்கும் காற்றை போன்றது என்று கூறியுள்ள மம்மூட்டி, உடல்நிலை மிகவும் குன்றியிருக்கும் ஒரு சிறந்த நடிகரை அழைத்து ஒரு கதாபாத்திரம் கொடுத்தால் கூட, அவர் வந்து தனது சிறந்த நடிப்பை தர முயற்சிப்பார்கள்.
மறைந்த புகழ்பெற்ற தமிழ் நடிகர் எம்.ஆர். ராதா அவர்களைப் பற்றிய ஒரு சுவாரசியமான நினைவை மம்மூட்டி பகிர்ந்துள்ளார். அதில் எம்.ஆர். ராதா அவர்கள் உடல்நிலை மிகவும் நலிவடைந்து, நடப்பதற்கு இரண்டு பேரின் உதவி தேவைப்பட்ட காலத்திலும், கேமரா முன்னால் நின்றால் ஒரு ஆற்றல்மிக்க கலைஞராக மாறிவிடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அவர் எங்காவது அமர்ந்திருப்பார். இயக்குனர் அவரை ஷாட்டுக்கு அழைக்கும்போது, இரண்டு பேர் அவரை தாங்கிப் பிடித்து அழைத்து வருவார்கள். ஸ்டார்ட் கேமரா என்று இயக்குனர் சொல்லும் வரை அவரை அவர்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஆக்ஷன் என்ற சத்தம் கேட்டவுடன், அவர்கள் கையை எடுத்துவிடுவார்கள். அந்த நொடியே ராதா முழு பலத்துடன் நடித்து அசத்துவார். அப்படிப்பட்ட நடிகர்கள் எல்லாம் இங்கே இருந்திருக்கிறார்கள் என்றும் பகிர்ந்துள்ளார்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications

