ஃபாக்ஸ்கானை தொடர்ந்து டிக்சன் நிறுவனத்தின் மெகா திட்டம்.. ஸ்மார்ட்போன் உற்பத்தி மையமாகும் இந்தியா..

டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய ஸ்மார்ட் போன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறது. மோட்டோரோலா, கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தேவையான ஸ்மார்ட் ஃபோன்களை தயாரித்து வழங்கி வருகிறது டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம்.

இந்த நிறுவனம் தங்களுடைய ஸ்மார்ட் போன் உற்பத்தியை மேலும் 50 சதவீதம் அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களும் ஸ்மார்ட் போன் மற்றும் மின்னணு சாதன உற்பத்திக்காக சீனாவை சார்ந்திருக்கும் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என முடிவு செய்திருக்கின்றன. இதற்காக இந்த நிறுவனங்கள் சீனாவை தவிர்த்து மற்ற நாடுகளில் தங்களுடைய உற்பத்தியை பெருக்குவதில் ஆர்வம் காட்டுகின்றன .

ஃபாக்ஸ்கானை தொடர்ந்து டிக்சன் நிறுவனத்தின் மெகா திட்டம்.. ஸ்மார்ட்போன் உற்பத்தி மையமாகும் இந்தியா..

அந்த வகையில் இந்தியாவில் டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் மோட்டரோலா ,கூகுள், டிரான்ஸியான் ஆகிய நிறுவனங்களுக்கு தேவையான ஸ்மார்ட் போன்களை தயார் செய்து வழங்கி வருகிறது . இங்கே உற்பத்தி செய்யப்படக்கூடிய இந்த பிராண்டுகளின் போன்களானது வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது .இந்த நிலையில் அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக மோதல் உள்ளிட்டவை காரணமாக டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட் போன் உற்பத்தியை உயர்த்துவதற்கு முடிவு செய்து இருக்கிறது.

இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான அதுல் லால் வெளியிட்டுள்ள தகவலில் தங்கள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் உற்பத்தி திறனை மேலும் 50 சதவீதம் உயர்த்துவதற்கு முடிவு செய்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனை தற்போது பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும் இதன் காரணமாக தங்களுக்கு அந்த நிறுவனத்திடம் இருந்து பெரிய அளவிலான ஆர்டர்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார் .

அமெரிக்காவில் விற்பனையாக கூடிய பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்வதற்கான ஆர்டர்கள் தங்களுக்கு அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மோட்டோரோலா மட்டுமில்லாமல் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட் போன்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்கிறது டிக்சன் நிறுவனம். அதேபோல இன்பினிக்ஸ் உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களையும் இந்தியாவில் டிக்சன் நிறுவனம் உற்பத்தி செய்து ஆப்பிரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

ஒட்டுமொத்தமாக டிக்சன் நிறுவனம் 10 மில்லியனில் இருந்து 12 மில்லியன் அளவிலான ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் விவோ நிறுவனத்துடன் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை ஏற்படுத்தி விவோ பிராண்ட் ஸ்மார்ட்போன்களையும் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. 2026 - 27ஆம் நிதியாண்டில் விவோ நிறுவனத்துடன் கூட்டு நிறுவனம் அமைக்கப்பட்டு ஸ்மார்ட் போன்கள் உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிறுவனம் நொய்டா பகுதியில் ஒரு மில்லியன் சதுரஅடி பரப்பளவிலான மொபைல் போன் உற்பத்தி ஆலையை வருகிறது. அது தவிர மொபைல் ஃபோன்களுக்கு தேவையான கேமரா ,லித்தியம் பேட்டரிகள் மற்றும் மடிக்கணினி, சர்வர்கள், எஸ் எஸ் டி உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் பணிகளையும் தீவிரப்படுத்தி இருக்கிறது.

FAQs
டிக்சன் நிறுவனம் எந்த நிறுவனத்தோடு கூட்டு நிறுவனம் அமைக்க உள்ளது?

டிக்சன் நிறுவனம் விவோ நிறுவனத்துடன் இணைந்து கூட்டு நிறுவனம் அமைக்க இருக்கிறது.

டிக்சன் நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியை எத்தனை சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது?

டிக்சன் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான அதுல் லால் வெளியிட்டுள்ள தகவலில் தங்கள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் உற்பத்தி திறனை மேலும் 50 சதவீதம் உயர்த்துவதற்கு முடிவு செய்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் என்ன உற்பத்தி செய்கிறது?

மோட்டோரோலா, கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தேவையான ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்கிறது.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+