இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவது பெரும் அச்சத்தை முதலீட்டைளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 600 புள்ளிகளும், நிஃப்டி 180 புள்ளிகளும் சரிந்துள்ளது. இன்றைய சரிவுக்கு பெரும் பங்கு வகித்தது ஐடி சேவை துறை தான் என்றால் மிகையில்லை.
இந்த நிலையில் ஜூன் மாத மத்தியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வகையிலான காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் சுமார் 6.85 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை செய்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், கடந்த 6 வர்த்தக நாளில் 5 நாட்களில் மட்டும் சுமார் 1.6 பில்லியன் டாலர் அதாவது 15,000 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
நேற்று ஒரு நாள் மட்டும் 273 கோடி ரூபாய் மதிப்பிலான (முதலீட்டு தொகைக்கும், விற்பனை தொகைக்குமான வித்தியாசம்) பங்குகள் விற்கப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திடிரென பங்குகளை விற்க என்ன காரணம்..?
கச்சா எண்ணெய் விலை உயர்வும் (பணவீக்கம் அச்சம்), பத்திர முதலீட்டில் கிடைக்கும் அதிகப்படியான லாபமும் முதலீட்டாளர்களுக்கு வளரும் சந்தையில் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய வேண்டிய ஆர்வமும், தேவையும் குறைந்து வருகிறது. இதனால் இந்தியா உட்பட அனைத்து வளரும் சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளியேறி வருகிறது.
இதுவே இந்திய என எடுத்துக்கொண்டால் 3 பிரச்சனைகள் FPI முதலீட்டாளர்களின் முதலீட்டு வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
1. கச்சா எண்ணெய் விலையின் தொடர் உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்கும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஜூலை மாதத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை சுமார் 20 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலரை நெருங்கி வருகிறது.
2. நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து உயர்வது
3. ரூபாய் மதிப்பு சரிவு (FCNR வைப்பு நிதிக்கு பின்பும் சரிகிறது). இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த 2 மாத முதலீட்டு லாபத்தை போதுமென இந்திய பங்குகளை விற்பனை செய்து வருகின்றன.
இதேவேளையில் வளரும் சந்கையில் இருந்து வெளியேறும் முதலீடுகள் பெரும்பாலும் AI தொடர்பான பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்வதை பார்க்க முடிகிறது. இந்தியாவிலும் ஏஐ தொடர்பான பங்குகள் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
