டெல்லி: அமெரிக்காவை சேர்ந்த முன்னணி டெக் நிறுவனங்களின் கவனம் தற்போது இந்தியாவின் மீது விழ தொடங்கி இருக்கிறது. பல்வேறு அமெரிக்க டெக் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன.
கூகுளை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனமும் இந்தியாவில் ஏஐ பிரிவில் முதலீடு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது . ஆசியாவிலேயே இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் 1.57 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய போகிறோம் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா கூறியிருக்கிறார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லா இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார். அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவில் ஏஐ வாய்ப்புகள் குறித்து, பிரதமர் மோடியுடன் ஆக்கப்பூர்வமாக கலந்துரையாடியதாக சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஏஐ லட்சியங்களை ஆதரிக்க ஆசியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப எதிர்காலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு திறன்கள் உள்ளிட்டவற்றை உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதிப்பூண்டுள்ளது என சத்ய நாதெல்லா தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் .
செயற்கை நுண்ணறிவு துறையை பொறுத்தவரை இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கையுடன் உள்ளன என பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
முன்னதாக கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 15 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மிகப்பெரிய ஏஐ டேட்டா மையத்தை நிறுவுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அமெரிக்காவுக்கு வெளியே கூகுள் அமைக்கும் மிகப்பெரிய டேட்டா மையம் இதுவாகும். இந்த சூழலில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 17.5 பில்லியன் டாலரை இந்தியாவில் முதலீடு செய்வதாக தற்போது அறிவித்திருக்கிறது.

முன்னதாக இண்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Lip-bu Tan பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது நாட்டின் செமி கண்டக்டர் உற்பத்தி பிரிவில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வதாகவும் அவர் வாக்குறுதி தந்தார். இது தொடர்பாக டாடா குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் இன்டெல் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
அதே போல காக்னிசண்ட் தலைமை அதிகாரிகளும் பிரதமர் மோடியை சந்தித்து இந்தியாவின் பல்வேறு பிரிவுகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தை அமல் படுத்துவதில் தங்களுடைய பங்களிப்பு குறித்து வாக்குறுதி தந்தனர் . அமெரிக்க டெக் நிறுவனங்கள் இந்தியாவை ஒரு சந்தையாக மட்டுமே பார்த்த காலம் மாறி தற்போது தங்களின் முக்கியமான டெக் மையமாக மாற்ற முன் வந்துள்ளது.
கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய டெக் நிறுவனங்களின் நீண்ட கால திட்டமிடலில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உள்ளது இதன் மூலம் தெரிய வருகிறது. அந்த வகையில் ஏஐ மையமாகவும் , கிளவுட் உள்கட்டமைப்பு, டேட்டா மையம், செமி கண்டக்டர் மையமாகவும் இந்தியா மாற உள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications