சென்னை: வீட்டு வாடகை ஒப்பந்தம் வீட்டு உரிமையாளருக்கும், குடியிருப்பவருக்கும் சட்ட ரீதியான பாதுகாப்பை தரக் கூடியது. வாடகை ஒப்பந்தம் போடுவது கட்டாயம் என்கிறது அரசு. ஆனால் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்களும் வாடகைக்கு குடியிருப்பவர்களும் ஒப்பந்தம் போடுவது கிடையாது. பின்னாளில் பிரச்னை வரும் போது தான் ஒப்பந்தம் போடாமல் விட்டது தவறு என உணர்கின்றனர்.
சட்ட பாதுகாப்பு தரும் ஒப்பந்தம்: வீட்டு வாடகை ஒப்பந்தம், வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு குடியிருப்பவர் இருவரின் நலனையும் கருத்தில் கொண்டு போட வேண்டும். ஒப்பந்தமானது வாடகைக்கு குடியிருப்பவர் மற்றும் உரிமையாளர் ஆகிய இரு தரப்பும் பரஸ்பரம் ஒப்புக் கொண்ட விஷயங்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். பெரும்பாலும் வாடகை ஒப்பந்தம் உரிமையாளருக்கு சாதகமாகவே இருப்பதாக விமர்சனங்களும் எழுகின்றன. இதற்கு லீவ் அண்ட் லைசென்ஸ் வாடகை ஒப்பந்தம் சரியான தீர்வாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

லீவ் அண்ட் லைசென்ஸ் வாடகை ஒப்பந்தம்: சொத்தின் உரிமையாளர் மற்றும் வாடகைக்கு குடிவருபவர் இடையே போடப்படும் ஒப்பந்தம் இது. இரு தரப்புக்கும் இடையிலான அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெற்றிருக்கும். முகவரி, வீட்டின் வகை மற்றும் அளவு ஆகியவற்றை உள்ளடக்கியது. அதுமட்டுமின்றி மாத வாடகை, டெபாசிட் தொகை, ஒப்பந்தத்தின் காலம், ஒப்பந்தத்தை முடித்து கொள்வதற்கான இரு தரப்பிற்குமான நிபந்தனைகள் இடம்பெற்றிருக்கும். இது ஒப்பந்தம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது தான் முக்கியம். ஒப்பந்தம் இல்லாத பட்சத்தில் உரிமையாளர் நினைத்த நேரத்தில் வாடகையை உயர்த்தும் வாய்ப்பை பெறுகிறார்.
வாடகை ஒப்பந்தத்தில் , மாதந்தோறும் எந்த தேதியில் வாடகை செலுத்தப்படும் என்பது இடம்பெற்றிருக்க வேண்டும். ஒருவேளை வாடகை செலுத்துவது தாமதமானால் என்ன செய்ய வேண்டும், எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை வாடகை உயர்த்தப்படும், மெயிண்டனென்ஸ் கட்டணம், தண்ணீர் கட்டணம் ஆகியவற்றை யார் செலுத்துவது என்பன உள்ளிட்டவை வாடகை ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும்.
ஒப்பந்தத்தை பதிவு செய்வது அவசியம்: வாடகைக்கு குடியிருப்பவர் வீட்டின் மீது உரிமை கொண்டாடாமல் இருக்க, வாடகை ஒப்பந்தத்தை போட்டு அதனை பதிவு செய்வது முக்கியம். அதே போல வீட்டை காலி செய்வது பற்றி எத்தனை நாட்களுக்கு முன் கூற வேண்டும் என்பது கட்டாயம் இடம்பெற வேண்டும் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.
வீட்டை வாடகைக்கு விடும் , உரிமையாளர் தரப்பில் வீட்டில் என்னென்ன சாதனங்கள் , என்ன பொருட்கள் வழங்கப்பட்டன என்பதும் வாடகை ஒப்பந்த பத்திரத்தில் இடம்பெற வேண்டும். இரு தரப்பும் தங்களுக்கான நிபந்தனைகளை முறையாக பேசி ஒரு மித்த கருத்தோடு ஒப்பந்தம் போட வேண்டும். அந்த ஒப்பந்தத்தை பதிவு செய்வதோடு மட்டுமில்லாமல் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்வது மிக மிக முக்கியம்.
Story Written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications