நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் தொலைதூர பயணங்களுக்கு ரயில்களையே அதிகம் சார்ந்துள்ளனர். சமீபகாலமாக மக்கள் விமானத்தில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் விமான பயணம் என்பது பெரும்பாலான இந்தியர்களின் நிதி சக்திக்கு அப்பாற்றப்பட்டதாக இருக்கிறது.
நம் நாட்டின் மொத்த மக்கள்தொகையான 140 கோடியில் 3 சதவீதம் பேர் மட்டுமே வழக்கமாக விமான பயணங்களை மேற்கொள்கின்றனர். அதாவது 140 கோடி பேரில் 4.2 கோடி பேர் மட்டுமே உள்நாட்டுக்குள் விமானங்களில் பறக்கின்றனர். இருப்பினும் எதிர்காலத்தில் மக்கள் விமானங்களில் பயணம் செய்வது பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி வரும் காலங்களில் விமான பயணம் என்பது ஆடம்பரமல்ல ஆனால் அவசியமானது என்ற நிலைக்கு மாறும். பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த பிரசன்னா குமார் ஜா டெல்லியில் வரி ஆலோசகராக பணியாற்றி வருகிறார். அண்மையில் தர்பங்காவில் வசித்து வரும் தனது தாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்ற தகவலை கேட்டதும் உடனடியாக விமானத்தில் பறந்து சென்ற தனது தாயை பார்த்தார். இதற்காக அவருக்கு ரூ.10,500 செலவானது.
இது குறித்து பிரசன்னா குமார் ஜா கூறுகையில், செலவு அதிகம் எனவே மாற்று வழியில் தர்பங்காவுக்கு செல்ல நான் முடிவு செய்து இருந்தால், டெல்லியில் இருந்து ரயிலில் செல்ல வேண்டும் பின்பு டாக்ஸில் தர்பங்காவுக்கு செல்ல வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 30 மணி நேரம் ஆகும். எனவே விமான பயணம் இனி ஆடம்பரமல்ல ஆனால் அவசியமானது என்று தெரிவித்தார்.
விமான பயணம் அவசியமானது என மாறும் என்பதால் விமான பயணத்துக்காக தேவை அதிகரிக்கும். மேலும் நாட்டில் விமான சேவையை விரிவுப்படுத்தும் நோக்கில் பல நகரங்களில் விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
உதாரணமாக 2014ல் நம் நாட்டில் 74 விமான நிலையங்கள் இருந்தது, ஆனால் இப்போது 148 விமான நிலையங்கள் உள்ளன. 2030ம் ஆண்டுக்குள் விமான நிலையங்களின் எண்ணிக்கை 230ஆக அதிகரிக்கும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகிறார்.
டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்கள் உலகின் பிசியான விமான நிலையங்களில ஒன்றாக மாறிவிட்டன. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அடுத்த ஆண்டு 10.90 கோடி பயணிகளை கையாள தயாராக இருக்க வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம், அமெரிக்காவில் உள்ள ஹார்ட்ஸ் ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்துக்கு அடுத்தப்படியாக உலகின் இரண்டாவது பிசியான விமான நிலையமாக தயாராகி வருகிறது.
மேலும் ஆண்டுக்கு ஆண்டு விமான பயணிகளின் எண்ணிக்கை வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே அதிகரித்து வரும் விமான பயணிகளின் பூர்த்தி செய்யும் மற்றும் வளர்ச்சிக்கான இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் நோக்கிலும் இந்திய விமான சேவை நிறுவனங்கள் விமானங்களை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்திய விமான சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டு ஏறக்குறைய ஆயிரம் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளன. உலகில் வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு விமானங்களை வாங்கியதில்லை. இந்திய விமான சந்தை விரிவடைந்து வருவது உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பாளர்களான அமெரிக்காவின் போயிங் மற்றும் ஐரோப்பாவின் ஏர்பஸ் ஆகிய நிறுவனங்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் மொத்தம் 7,000 கோடி டாலர் மதிப்பில் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களையும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்க உள்ளது. நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ, 500 ஏர்பஸ் ஏ230 விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications