டெல்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் இந்திய பொருளாதாரத்தை பதம் பார்க்க தொடங்கியுள்ளது. அண்மையில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதன் தாக்கம் உடனடியாக பங்குச்சந்தையில் எதிரொலித்தது.
சர்வதேச அளவில் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்படும் போது அது உலக பொருளாதாரத்தையே பாதிக்கும். குறிப்பாக ஈரான் போன்ற எண்ணெய் வளமிக்க நாடு இது போன்ற பிரச்னைகளில் ஈடுபட்டிருக்கும் போது அதன் தாக்கம் அழுத்தமாக இருக்கும். ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன் போரே முடிவுக்கு வராத நிலையில் ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் உலகளவில் ஒரு ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளுடனுமே நல்ல உறவுடன் இருக்கிறது. இந்த பதற்றம் காரணமாக இந்தியாவின் வர்த்தக நடவடிக்கைகள் பெரும் பாதிப்பை சந்திக்க உள்ளன. ஈரான் – இஸ்ரேல் இடையிலான பிரச்னை காரணமாக செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இது இந்தியாவின் விநியோக சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்திய பங்குச்சந்தையை பொறுத்தவரை ஈரான் – இஸ்ரேல் பிரச்னை தொடங்கியது முதல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 3% சரிந்துள்ளது. இதனால் பத்திரங்களின் விலை சரியும், நிறுவனங்களுக்கான கடன் செலவுகள் அதிகரிக்கும், கச்சா எண்ணெய் விலை உயரும் , பங்குச்சந்தைகள் சரியும் என இன்ஃபோமெரிக்ஸ் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் சிறப்பு பொருளாதார நிபுணர் மனோரஞ்சன் சர்மா கூறுகிறார்.
ஈரானில் இருந்து இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை ஏறி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரக் கூடும். இது சாமானியர்களுக்கு தான் பெரும் சுமையாகி போகும். வெள்ளிக்கிழமையன்று ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 90.54 டாலர்கள் என விற்பனையானது. இது மேலும் உயரும் அபாயமுள்ளது. செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து தடை பட்டால் பொருட்கள் பரிமாற்றங்களில் தாமதம், வர்த்தக விலை அதிகரிப்பது ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டு உலக வர்த்தகமே பாதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு இந்தியாவில் இருந்து 8.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது, அதே போல 2.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.ஈரானுக்கு இந்தியாவில் இருந்து 1.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களும், ஈரானிடம் இருந்து 672 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. தற்போது இவை அனைத்துமே பாதிக்கப்படும்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

14.2 கிலோ சிலிண்டரில் 10 கிலோ LPG.. மத்திய அரசின் புது திட்டம்.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை..!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?



Click it and Unblock the Notifications