இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தைப் பாரத ரத்னா விருது பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிராவில் பிப்ரவரி 7ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாணய கொள்கை கூட்டத்தை 8ஆம் தேதிக்கு ரிசர்வ் வங்கி ஒத்திவைத்துள்ளது.
சரி ரெப்போ விகிதம் உட்பட அனைத்து வட்டி விகிதத்தையும் நிர்ணயம் செய்வது யார்..?!
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு தான் இந்த இருமாத நாணய கொள்கையை நடத்துகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், பணப்புழக்கம், வளர்ச்சி, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வட்டி உயர்வு குறித்து முடிவுகளை எடுக்கும்.
நாணய கொள்கை குழு
நாணய கொள்கை குழு என்பது ரிசர்வ் வங்கியின் கீழ் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும், இது நாட்டின் பணவியல் கொள்கையை வடிவமைக்கும் முக்கியப் பணியைச் செய்கிறது. இக்குழு ரெப்போ ரேட், ரிவர்ஸ் ரெப்போ ரேட், வங்கி விகிதங்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி நாணய கொள்கையை மறுசீரமைப்புச் செய்து நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்கிறது.
ஆறு உறுப்பினர்கள்
ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழுவில் ஆறு உறுப்பினர்கள் உள்ளனர், மூன்று பேர் மத்திய அரசால் பரிந்துரைக்கப்படுபவர்கள், மற்ற மூவரும் RBI உறுப்பினர்கள். ரிசர்வ் வங்கியின் கவர்னர் எப்போதும் நாணய கொள்கை குழுவின் அதிகாரப்பூர்வ தலைவராக இருப்பார். தற்போது சக்திகாந்த தாஸ் இக்குழுவின் தலைவர்.
4 ஆண்டுப் பணிக்காலம்
மேலும் நாணய கொள்கை குழுவில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நான்கு ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. உறுப்பினரின் பதவி காலம் குழுவின் முடிவுக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் நீட்டிக்க முடியும்.
இரண்டு மாதம்
நாணய கொள்கை குழுவின் கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் காரணத்தால் ஒரு வருடத்திற்கு ஆறு முறை நாட்டின் வளர்ச்சி அளவீடுகளைச் சரி செய்ய வாய்ப்பு உருவாகிறது. குறிப்பாகப் பணப்புழக்கத்தைக் குறைக்க இக்கூட்டங்கள் பெரிய அளவில் உதவுகிறது.
வாக்கெடுப்பு
மேலும் நாணய கொள்கை குழுவின் பல்வேறு முடிவுகளை வாக்களிப்பதன் மூலம் ஒப்புதல் பெறப்படுகிறது. 6 பேர் கொண்ட குழு என்பதால் ஒரு முடிவிற்கு 6 இல் 4 பேர் ஒப்புதல் அளித்தால் நிறைவேற்றப்படும்.
வட்டி விகிதம்
தற்போது ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், வங்கிகளுக்கான MSF விகிதம் 4.25 சதவீதமாகவும் உள்ளது. நாளை துவங்கும் கூட்டத்தில் இந்த வட்டி விகிதத்தில் கணிசமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications