அமெரிக்கா மற்றும் பிரிட்டன்அடுத்தபடியாக, சீனா நாட்டின் முன்னணி ஷாட் வீடியோ செயலியான TikTok ஐ தடை செய்த நாடுகள் பட்டியலில் நியூசிலாந்து-ம் இணைந்துள்ளது.
சமீபத்தில் ஐரோப்பிய ஆணையமும் அதன் ஊழியர்களுக்கு கார்ப்பரேட் மற்றும் தனிப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் கருவிகளில் TikTok ஐ இன்ஸ்டால் செய்வும், பயன்படுத்தவும் தடை விதித்தது.
சீன அரசாங்கம் டிக்டாக் மூலம் மக்களினஅ தரவு திருட்டு மற்றும் உளவு பார்ப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் வேளையில் நியூசிலாந்தும் இப்பட்டியலில் இணைந்துள்ளது டிக்டாக் நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஆனாலும் டிக்டாக் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது என்பது தான் உண்மை.
டிக்டாக் தடை
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பா, நியூசிலாந்து நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா டிக்டாக்-ஐ மொத்தமாக தடை செய்தது. ஆனால் இப்பட்டியலில் இருக்கும் நாடுகள் அரசு அதிகரிகள், பாதுக்காப்பு துறை அதிகாரிகள் மட்டுமே அரசுக்கு சொந்தமான கருவிகளில் டிக்டாக் பயன்படுத்த கூடாது என அறிவித்துள்ளது.
டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் இருந்து டிக்டாக் தடை செய்ய வேண்டும் என அறிவித்த போது, அமெரிக்க அரசு டிக்டாக்-ஐ சீனா மற்றும் உலக நாடுகளுக்கு அளிக்கும் சேவையை தனியாக பிரித்து, குளோபல் சேவை அளிக்கம் நிறுவனத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு பங்குகளை விற்பனை செய்து கூட்டணி முறையில் இயங்க அறிவுறுத்தியது.
1 பில்லியன் இன்டால்
இதுநாள் வரையில் இதற்கு முடிவு எடுக்கப்படாமல் இருக்கும் நிலையிலும், உலக நாடுகள் தடை செய்த நிலையிலும் டிக்டாக் 1 பில்லியன் இன்டால்களை பெற்றும் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த தடையெல்லாம் இல்லாமல் இருந்தால் இந்த நேரத்தில் 1.5 பில்லியன் இன்டால்களை பெற்றிருக்கும்.
ஜி ஜின்பிங்
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக பதட்டங்கள் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக பதவியேற்றியுள்ள நிலையில் சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் பயணத்தை வேகப்படுத்த உள்ளது.
குற்றச்சாட்டு
அமெரிக்க அரசு மற்றும் சட்ட வல்லுனர்கள் டிக்டாக் செயலி வாயிலாரக அமெரிக்க பயனர் தரவு சீனாவிற்கு அனுப்பப்படலாம் என்று நம்புகிறார்கள். சீன நிறுவனங்களின் மீது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இரும்புப் பிடியை கொண்டு உள்ளது, இதனால் உலக மக்களின் தரவு சீன அரசாங்கத்தின் கைகளில் இறங்கக்கூடும் என அதிகளவில் நம்பப்படுகிறது.
சீன டெக் வல்லுனர்கள்
இதேபோல் இன்றளவும் டிக்டாக் செயலியின் தரவுகளை சீனாவில் இருக்கும் டெக் வல்லுனர்கள் பயன்படுத்தும் அளவில் தான் உள்ளது. இது பல முறை அமெரிக்க டிக்டாக் நிறுவன கூட்டத்தில் நிருபிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications